இந்தியாவிலேயே முன்னோடி திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளோம்; ஆனாலும் பாராட்டமாட்டார்கள் - முதலமைச்சர்
கோவை: கோவையில் ரூ.663 கோடி மதிப்பிலான 768 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என எந்த பேதமும் இல்லாமல், அனைத்து தொகுதிகளிலும் நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருவதாக முதலமைச்சர் பெருமிதம்.
ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வில் ஒளியேற்றும் ஆட்சி இந்த திமுக ஆட்சி என தனது உரையில் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ரூ.663 கோடியில் புதிய திட்டங்கள்
கோவை மாவட்டம், ஈச்சனாரி பகுதியில் ரூ.663 கோடி மதிப்பிலான 768 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இதன் பின்னர் மக்களிடையே உரையாற்றிய அவர், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என எந்த பேதமும் இல்லாமல், அனைத்து தொகுதிகளிலும் நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருவதாக கூறினார். மேலும், ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வில் ஒளியேற்றும் ஆட்சி இந்த திமுக ஆட்சி என தனது உரையில் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அடக்குமுறையை மீறியவன்
தொடர்ந்து பேசிய அவர், "திமுக ஆட்சியின் கொள்கைகளும், கோட்பாடுகளும், எண்ணங்களும் சிந்தனைகளும் நிறைவேறிவிடக்கூடாது என நினைப்பவர்கள் மட்டுமே திமுக அரசை விமர்சித்துக்கொண்டிருக்கிறார்கள். என்னையும் விமர்சிக்கிறார்கள். விமர்சனம் என்பது எனக்கு புதிதல்ல. நான் விமர்சனத்தில் வளர்ந்தவன், விமர்சனங்களால் வளர்ந்தவன் நான். எதிர்ப்பையும் அடக்குமுறைகளையும் மீறி வளர்ந்தவன் நான். யாராவது இப்படி எதிர்த்தால்தான் நான் மேன்மேலும் இப்படி உற்சாகமாக செயல்படுவேன்.

விமர்சிக்க தகுதி கிடையாது
ஆனால் அதே நேரத்தில் எதிர்ப்பதன் மூலமாக தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிக்க வேண்டும் என்று நினைத்தால் அதை நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன். சொந்த கட்சிக்குள் நடக்கும் அதிகார போட்டியில், தங்களின் கையால் ஆகாத தனத்தை மறைப்பதற்கு இன்று அதிமுகவினர் திமுக அரசை விமர்சித்துக்கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு திமுகவை விமர்சிப்பதற்கு அவர்களுக்கு கிஞ்சிற்றும் தகுதி கிடையாது என்பதை அழுத்தமாக தெரிவித்துக்கொள்கிறேன்.

பக்க பலமாக
ஏனெனில் கடந்த ஓராண்டில் ஏராளமான திட்டங்களை நாங்கள் நிறைவேற்றியுள்ளோம். ஓராண்டிலேயே இவ்வளவு திட்டங்கள் என்றால் ஐந்து ஆண்டுகளில் ஏராளமான திட்டங்களை எங்களால் நிறைவேற்ற முடியும். இப்படியாக தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக கொண்டு வருவதே எங்கள் லட்சியம். இது உங்களுக்கான அரசு. உரிமையோடு கோரிக்கை வையுங்கள். உண்மையோடு நிறைவேற்றித் தருகிறோம். எனவே இந்த ஆட்சிக்கு நீங்கள் என்றும் பக்க பலமாக இருக்க வேண்டும்.

எதிர்பார்ப்பு அல்ல
தொகுதியில் உள்ள 10 கோரிக்கையை பட்டியலிட்டு அனுப்ப எங்கள் கட்சி எம்.எல்.ஏக்களிடம் மட்டுமல்ல பாஜக, அதிமுக என அனைத்து எம்.எல்.ஏக்களிடமும் கூறியுள்ளேன். இந்த திட்டம் இந்தியாவிலேயே முன்னோடி திட்டம் என கூறிக் கொள்வதில் பெருமைப்படுகிறேன். ஆனால் அவர்கள் இத்திட்டத்திற்கு பாராட்டவில்லையே என்று நான் நினைக்க மாட்டேன். அதை எதிர்பார்த்து கடமை ஆற்றுபவன் இந்த ஸ்டாலின் அல்ல" என்று முதலமைச்சர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
-
கூடுதல் தொகுதிகள்.. கறார் கம்யூனிஸ்ட்.. அதிர்ச்சியில் அறிவாலயம்.. தொடரும் இழுபறி -
திமுகவை காலி செய்ய விஜய் போதும்! எடப்பாடியிடம் சொன்ன பியூஷ் கோயல்! கான்ஃபரன்ஸ் காலில் 3வது நபர் யார் -
சட்டம் ஒழுங்கு பிரச்சனை அஸ்திரத்தை கையிலெடுத்த அதிமுக கூட்டணி .. மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் -
பாஜகவுடன் கூட்டணி சேர்ந்தால் தோல்வி உறுதி.. 2001ல் திமுகவே தோற்றிருக்கு.. டிகேஎஸ் இளங்கோவன் ஒரே போடு -
30 ஆண்டு மரபு உடைந்தது! புதுச்சேரி, தமிழ்நாட்டிற்கு.. வேறு வேறு தேதிகளில் தேர்தல்! ஏன் இந்த மாற்றம்? -
குடைச்சல் கொடுக்கும் கூட்டணி கட்சிகள்… திமுக முகாமில் கிளைமேக்ஸ் மாறுமோ? -
தேர்தல் விதி வருவதற்கு.. 20 நிமிடம் முன் சென்னையில் மாஸ் "சம்பவம்".. இது லிஸ்டுலேயே இல்லையே -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
விஜயை பாஜக கூட்டணிக்குள் கொண்டு வரும் வரை அவகாசம்! மெகா பிளான்! சந்தேகம் தரும் தமிழக தேர்தல் அட்டவணை -
‘மெடிக்கல் மினிஸ்டர்' பதவி தர மறுத்த கருணாநிதி? எம்.ஜி.ஆர் கிளப்பிய ஊழல் புகார்.. உடைந்த திமுக! -
தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கல் செய்ய 4 நாட்கள் மட்டுமே இருக்கு.. அர்ச்சனா பட்நாயக் சொன்ன அப்டேட்! -
38 நாட்களில் தமிழ்நாட்டில் தேர்தல்.. இந்த விஷயங்களை மறக்காதீங்க! முடிவை தீர்மானிக்க போவதே இதான்












Click it and Unblock the Notifications