இந்தியாவிலேயே முன்னோடி திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளோம்; ஆனாலும் பாராட்டமாட்டார்கள் - முதலமைச்சர்
கோவை: கோவையில் ரூ.663 கோடி மதிப்பிலான 768 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என எந்த பேதமும் இல்லாமல், அனைத்து தொகுதிகளிலும் நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருவதாக முதலமைச்சர் பெருமிதம்.
ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வில் ஒளியேற்றும் ஆட்சி இந்த திமுக ஆட்சி என தனது உரையில் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ரூ.663 கோடியில் புதிய திட்டங்கள்
கோவை மாவட்டம், ஈச்சனாரி பகுதியில் ரூ.663 கோடி மதிப்பிலான 768 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இதன் பின்னர் மக்களிடையே உரையாற்றிய அவர், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என எந்த பேதமும் இல்லாமல், அனைத்து தொகுதிகளிலும் நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருவதாக கூறினார். மேலும், ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வில் ஒளியேற்றும் ஆட்சி இந்த திமுக ஆட்சி என தனது உரையில் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அடக்குமுறையை மீறியவன்
தொடர்ந்து பேசிய அவர், "திமுக ஆட்சியின் கொள்கைகளும், கோட்பாடுகளும், எண்ணங்களும் சிந்தனைகளும் நிறைவேறிவிடக்கூடாது என நினைப்பவர்கள் மட்டுமே திமுக அரசை விமர்சித்துக்கொண்டிருக்கிறார்கள். என்னையும் விமர்சிக்கிறார்கள். விமர்சனம் என்பது எனக்கு புதிதல்ல. நான் விமர்சனத்தில் வளர்ந்தவன், விமர்சனங்களால் வளர்ந்தவன் நான். எதிர்ப்பையும் அடக்குமுறைகளையும் மீறி வளர்ந்தவன் நான். யாராவது இப்படி எதிர்த்தால்தான் நான் மேன்மேலும் இப்படி உற்சாகமாக செயல்படுவேன்.

விமர்சிக்க தகுதி கிடையாது
ஆனால் அதே நேரத்தில் எதிர்ப்பதன் மூலமாக தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிக்க வேண்டும் என்று நினைத்தால் அதை நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன். சொந்த கட்சிக்குள் நடக்கும் அதிகார போட்டியில், தங்களின் கையால் ஆகாத தனத்தை மறைப்பதற்கு இன்று அதிமுகவினர் திமுக அரசை விமர்சித்துக்கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு திமுகவை விமர்சிப்பதற்கு அவர்களுக்கு கிஞ்சிற்றும் தகுதி கிடையாது என்பதை அழுத்தமாக தெரிவித்துக்கொள்கிறேன்.

பக்க பலமாக
ஏனெனில் கடந்த ஓராண்டில் ஏராளமான திட்டங்களை நாங்கள் நிறைவேற்றியுள்ளோம். ஓராண்டிலேயே இவ்வளவு திட்டங்கள் என்றால் ஐந்து ஆண்டுகளில் ஏராளமான திட்டங்களை எங்களால் நிறைவேற்ற முடியும். இப்படியாக தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக கொண்டு வருவதே எங்கள் லட்சியம். இது உங்களுக்கான அரசு. உரிமையோடு கோரிக்கை வையுங்கள். உண்மையோடு நிறைவேற்றித் தருகிறோம். எனவே இந்த ஆட்சிக்கு நீங்கள் என்றும் பக்க பலமாக இருக்க வேண்டும்.

எதிர்பார்ப்பு அல்ல
தொகுதியில் உள்ள 10 கோரிக்கையை பட்டியலிட்டு அனுப்ப எங்கள் கட்சி எம்.எல்.ஏக்களிடம் மட்டுமல்ல பாஜக, அதிமுக என அனைத்து எம்.எல்.ஏக்களிடமும் கூறியுள்ளேன். இந்த திட்டம் இந்தியாவிலேயே முன்னோடி திட்டம் என கூறிக் கொள்வதில் பெருமைப்படுகிறேன். ஆனால் அவர்கள் இத்திட்டத்திற்கு பாராட்டவில்லையே என்று நான் நினைக்க மாட்டேன். அதை எதிர்பார்த்து கடமை ஆற்றுபவன் இந்த ஸ்டாலின் அல்ல" என்று முதலமைச்சர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
-
பழைய நியூஸ் பேப்பரை காட்டி பிரச்சாரம் செய்யும் எடப்பாடி பழனிசாமி.. உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலடி -
850ஆக உயர்த்தப்படும் மக்களவை இடங்களின் எண்ணிக்கை! மத்திய அரசு சொன்ன மேட்டர்! எதிர்க்கட்சிகள் ஷாக் -
நெல் ஊக்கத்தொகை விவகாரம்.. கடிதத்தை வெளியிட்டு.. ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த நிர்மலா சீதாராமன் -
"கடிதத்தை வெளியிட்டதிலேயே குட்டு அம்பலமாகிவிட்டது".. நிர்மலா சீதாராமனை விமர்சித்த முதல்வர் ஸ்டாலின் -
நெல் ஊக்கத்தொகை.. கடிதத்தை பொதுவெளியில் வெளியிட தயாரா.. நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால் -
தவெக மீதான தாக்குதல்கள்: விஜய் ‘இமேஜை' பாதித்துள்ளதா? களம் சொல்வது என்ன? -
2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் மண்டலம் வாரியான விவரம்.. திமுக ஜெயிக்க மூன்று காரணங்கள் -
“வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை அவதூறாகப் பேசி மிரட்டி வருகின்றனர்”- விஜய் பரபரப்பு குற்றச்சாட்டு -
தமிழ்நாட்டு உயர்கல்வியில் புதுமைப்பெண் – தமிழ்புதல்வன் திட்டங்கள் நிகழ்த்திய மாற்றங்கள் -
அண்ணனின் 5 சவரன் தங்கம் அதிரடி ஆஃபர்.. ஆடிப்போன போடி களம்! ஓபிஎஸ் போட்ட தேனி கணக்கு செட்டாகுமா? -
திடீரென மயங்கிய முதியவர்.. யோசிக்காமல் அவிநாசி இளம் திமுக பெண் வேட்பாளர் செய்த செயல்.. நெகிழ்ச்சி -
ரூ.8000 கூப்பன் கொடுத்து.. வாக்கு கேட்ட திமுக வேட்பாளர் செந்தில்! கொந்தளிக்கும் அதிமுக












Click it and Unblock the Notifications