30 எம்ஏ ஆர்சிடி என்ற உயிர் காக்கும் கருவி உங்கள் வீட்டில் இருக்கா.. கோவை மின்வாரிய அதிகாரி விளக்கம்

Subscribe to Oneindia Tamil

கோவை: தென்மேற்கு பருவ மழை காலம் தொடங்குவதால் மின்விபத்துகளை தடுக்க பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்ன? என்பது குறித்து மின்சார வாரியம் அறிவித்துள்ளது. வீட்டில் உள்ள மின்சாதனத்தில் மின் அதிர்ச்சியை உணர்ந்தால் உடனே வீட்டில் உள்ள மெயின் சுவிட்சை உலர்ந்த ரப்பர், காலணிகளை அணிந்துகொண்டு அணைத்துவிட்டு உடனடியாக மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் கொடுக்க வேண்டும். மின்சார கம்பத்திற்காக போடப்பட்டுள்ள இழுவை கம்பி மீது அல்லது மின்கம்பத்தின் மீது கொடி கயிறு கட்டி துணி காய வைக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோவை மண்டல மின்சாரவாரிய தலைமை பொறியாளர் குப்புராணி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், "30 எம்.ஏ. ஆர்.சி.டி. என்ற உயிர் காக்கும் கருவியை ஒவ்வொரு வீட்டிலும் பொருத்தி மின்விபத்தில் இருந்து காக்கலாம். மழைக்காலங்களில் மின்மாற்றிகள், மின்கம்பங்கள், மின் பகிர்வு பெட்டிகள், இழுவை கம்பிகள் ஆகியவற்றின் அருகே செல்ல வேண்டாம்.

electricity eb

வீட்டில் உள்ள மின்சாதனத்தில் மின் அதிர்ச்சியை உணர்ந்தால் உடனே வீட்டில் உள்ள மெயின் சுவிட்சை உலர்ந்த ரப்பர், காலணிகளை அணிந்துகொண்டு அணைத்துவிட்டு உடனடியாக மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் கொடுக்க வேண்டும். மின்சார கம்பத்திற்காக போடப்பட்டுள்ள இழுவை கம்பி மீது அல்லது மின்கம்பத்தின் மீது கொடி கயிறு கட்டி துணி காயவைக்கும் செயலை தவிர்க்கவும்.

இடி, மின்னல் தாக்குதலின்போது மின்கம்பங்கள், மரங்கள், உலோக கம்பி வேலி போன்றவை அருகில் தஞ்சம் அடைய வேண்டாம். இடி அல்லது மின்னலின்போது டி.வி., மிக்சி, கிரைண்டர், கணினி மற்றும் தொலைபேசி போன்றவற்றை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டாம். அறுந்து கிடக்கும் மின் கம்பிகளை தொடாமலும், மிதிக்காமலும் இருக்க வேண்டும். இதுகுறித்து உடனடியாக மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கவும்.ஈரமான கைகளுடன் சுவிட்சை உபயோகப்படுத்த வேண்டாம். கால்நடைகளை மின்கம்பத்திலோ, இழுவை கம்பிகளிலோ கட்டக்கூடாது.

புதிய கட்டிடங்களில் வேலை செய்யும்போது அருகில் செல்லும் மின்கம்பிகளை கவனத்தில் கொண்டு தகுந்த பாதுகாப்புடன் வேலை மேற்கொள்ள வேண்டும். கேபிள் டி.வி. வயர்களை மின்பாதைகளின் குறுக்கே எடுத்துச்செல்லக்கூடாது. மழை பெய்யும்போது கேபிள் வயர்களை தொடக்கூடாது. மெயின் சுவிட்சை அணைத்த பின்னர்தான் மின்சாதனங்களில் உள்ள பழுதை சரி செய்ய வேண்டும். உலோக பொருட்களை மின் கம்பிகளுக்கு அருகில் எடுத்துச்செல்ல வேண்டாம். நிலத்தடி மின்பாதைகள் செல்லும் இடத்தில் நிலத்தினை துளையிடுதல் அல்லது நிலத்தை தோண்டுவதை தவிர்த்தல் வேண்டும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+