Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் தந்தையின் பென்சனை கேட்டு வந்த பானுப்பிரியா.. இப்படியா ஆகணும்

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை அருகே உள்ள வடமதுரை அப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த ராமமூர்த்தி என்பவர் கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் குடிநீர் பிரிவில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவர் காலமாகி விட்ட நிலையில், பென்சனுக்காக அவரது மனைவி ராஜேஸ்வரியும், மகள் பானுபிரியாவும் கோவை மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்தார்.. அப்போது யாரும் எதிர்பார்க்காத சம்பவம் நடந்தது.

கோவை அருகே வடமதுரை அப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த முதியவர் ராமமூர்த்தி. இவருடைய மனைவி ராஜேஸ்வரி. இவர்களுடைய மகள் பானுபிரியாவுக்கு 36 வயது ஆகிறது. இவருக்கு திருமணமாகிவிட்டது. இவரது கணவர் பெயர் ராஜ்குமார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

coimbatore pension corporation

பானுபிரியாவின் தந்தை ராமமூர்த்தி கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் குடிநீர் பிரிவில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். அவருக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டதால்,கடந்த சில மாதங்களுக்கு முன்பு காலமானார். தனது கணவர் இறந்ததால், பென்சன் தொடர்பாக கேட்பதற்காக ராஜேஸ்வரி மாநகராட்சி அலுவலகத்துக்கு செல்ல விரும்பினார்.

ராஜேஸ்வரிக்கு உதவியாக அவரது மகள் பானுபிரியாவும் நேற்று முன்தினம் கோவை மாநகராட்சி அலுவலகத்திற்கு புறப்பட்டு சென்றார். தாய் மகள் இருவரும், கோவை டவுன்ஹாலில் உள்ள மாநகராட்சி பிரதான அலுவலகத்திற்கு சென்றனர். அங்குள்ள முதல் மாடியில்தான் பென்சன் பிரிவு செயல்படுகிறது. அப்போது பானுபிரியா தனது தாய் ராஜேஸ்வரியிடம் நீங்கள் கீழே நில்லுங்கள், நான் முதல் மாடியில் உள்ள அலுவலகத்துக்கு சென்று கேட்டு விட்டு வருகிறேன் என்று கூறிச் சென்றுள்ளார்.

அங்கு சென்றதும் அதிகாரிகளை சந்தித்து பென்சன் தொடர்பாக கேட்டுள்ளார் பானுப்பிரியா. அதற்கு அவர்கள் சில ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள். உடனே அந்த ஆவணங்களை உடனடியாக சமர்ப்பிப்பதாக கூறிவிட்டு பானுப்பிரியா புறப்பட்டுள்ளார். அப்போது கோவை மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து சில அடி தூரம் தான் நடந்து சென்றிருப்பார் பானுப்பிரியா.. அப்போது திடீரென்று அவருக்கு மயக்கம் ஏற்பட்டது. அவர் மயங்கி அப்படியே பின்புறமாக சரிந்து விழுந்தார். இதில் அவருடைய பின்னந்தலையில் பலமாக அடிபட்டு விட்டது. உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த கோவை அரசு மருத்துவமனை டாக்டர்கள் ஏற்கனவே பானுபிரியா உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த உக்கடம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அத்துடன் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் தந்தையின் பென்சன் தொடர்பாக விசாரிக்க சென்றபோது மகள் திடீரென்று மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உயிரிழந்த பானுபிரியாவின் மருத்துவ அறிக்கை தொடர்பாக ஆய்வு செய்ததில் அவருக்கு எந்த நோயும் இல்லை என கூறப்படுகிறது. திடீரென மயங்கி விழுந்து தலையில் அடிப்பட்டு இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+