பார் நாகராஜுக்கு நெஞ்சு வலியாம்.. இதை போலீஸ் நம்பணுமாம்.. டாக்டர்கள் வைத்த குட்டு.. மீண்டும் சிறை!
கைதான பார் நாகராஜ் தனக்கு நெஞ்சு வலி என்று பொய் சொல்லியுள்ளார்
Recommended Video
கோவை: "என்னது.. பார் நாகராஜுக்கு நெஞ்சு வலியா... அடப்பாவமே.." என்று கூட சொல்ல தோன்றவில்லை. எல்லாமே பித்தலாட்டம்தான்!
நூற்றுக்கணக்கான பெண்களை கெடுத்து, நாசம் செய்த பொள்ளாச்சி கும்பலில் சம்பந்தப்பட்டவராக கருதப்படுபவர் பார் நாகராஜ்.
அதிமுகவுக்கு நெருங்கிய புள்ளியாக பார்க்கப்படுபவர். இது சம்பந்தமாக நாகராஜே பகிரங்கமாக கூறியுள்ளார். மேலும் புள்ளிகளுடன் எடுத்து கொண்ட போட்டோக்களும் வைரலாகின.

திடீர் கைது
ஆனால் இந்த சமாச்சாரம் எல்லாம் வெளியே வருவதற்கு முன்னமேயே நாகராஜை கட்சியில் இருந்து தூக்கி அடித்தது அதிமுக! இதற்கு நடுவில் என்ன ஆச்சோ தெரியவில்லை.. போன 7ம் தேதி பார் நாகராஜ் திடீரென்று கைதானார்.

நாய் பிரச்சனை
எதற்காக இந்த கைது நடவடிக்கை தெரியுமா? யாரோ ஒரு இளைஞன் நாய் ஒன்று வளர்த்து வந்திருக்கிறான். அதனை 25 ஆயிரம் ரூபாய்க்கு சபரீசன் விலைக்கு வாங்கி உள்ளார். இந்த நாய் வாங்குவதில், வேண்டுமென்றே ஒரு சண்டையை உருவாக்கி... அந்த நாய் வைத்திருந்த இளைஞனை சரமாரியாக வெளுத்து விட்டனர் பார் நாகராஜின் ஆட்கள்.

14 பேர் கைது
இது சம்பந்தமாக உடனடியாக போலீஸ் இறங்கி, ரெண்டு தரப்பிலும் 14 பேர் மீது கேஸ் போட்டு கோவை ஜெயிலில் கம்பி எண்ண வைத்துவிட்டனர். இப்படித்தான் கைதானார் நாகராஜ்!

நாய் மேட்டர்
திருநாவுக்கரசு & கோ கைதாகி ரொம்ப நாள் ஆகியும் பார் நாகராஜ் கைது செய்யப்படவில்லை.. டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்கியதாக உட்பட எத்தனையோ புகார்கள் வந்தும் நாகராஜ் கைது செய்யப்படவில்லை. மாறாக "சொந்த கிராமத்தில் பாதுகாப்பாக இருக்கும்படி என்னை போலீசாரே சொன்னார்கள்" என்று சொல்லி வந்த நாகராஜைதான் இந்த நாய் வாங்கிற விஷயத்தில் அதே போலீஸ் கைது செய்துள்ளது.

திடீர் நெஞ்சுவலி
சரி, கைதாகி நாகராஜ் ஜெயிலில் இருந்தாரா... அதுவும் இல்லை.. வந்துவிட்டது திடீர் நெஞ்சுவலி. அதனால் உடனடியாக அரசு ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆனார். ஆனால் டாக்டர்களோ செக் செய்து பார்த்துவிட்டு, "யு ஆர் பெர்பெக்ட்லி ஆல் ரைட்" என்று சொல்லி திரும்பவும் ஜெயிலுக்கே அனுப்பிட்டாங்களாம்!

மாஸ்டர் பிளான்
இது எல்லாத்துக்கும் காரணம் என்ன தெரியுமா? சிபிஐ பொள்ளாச்சி விஷயத்தை நோண்டி நுங்கெடுத்து வருகிறது. இதில் மட்டும் நாகராஜ் சிக்கி கொண்டால் அவ்வளவுதான்.. அதனால் அடிதடி கேஸில் உள்ளே தள்ளிவிட்டால், சிபிஐ விசாரணையை ஜவ்வு மாதிரி இழுக்கலாம் என்பதுதான் மாஸ்டர் பிளான்! நாகராஜுக்கு ஆதரவாக ஒருசில போலீசார் இப்படி ஒரு ஐடியாவை தந்ததால்.. ஜெயிலில் சேஃப்டியாக இருக்கிறாராம் நாகராஜ்!
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications