கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

5 மைனஸ் 2.. போச்சு இனி அவர்தான்.. கோவையில் ஸ்டாலின் இறக்கிய பார்முலா.. விக்கித்த அதிமுக "ரர"க்கள்!

Google Oneindia Tamil News

கோயம்பத்தூர்: திமுக உட்கட்சி தேர்தல் நடந்து வரும் நிலையில் கொங்கு மண்டலத்தில் செந்தில் பாலாஜியின் கை ஓங்கி இருப்பது அதிமுக தரப்பை அதிர வைத்து இருக்கிறதாம்.

திமுக உட்கட்சி தேர்தல் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. மாவட்ட செயலாளர்கள் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது

கோவை மாநகர் மாவட்டத்திற்கு கார்த்திக்கும், கோவை தெற்கு மாவட்டத்திற்கு தளபதி முருகேசனும், கோவை வடக்கு மாவட்டத்திற்கு ரவியும் மாவட்ட செயலாளர்களாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். மற்றவர்கள் இதுவரை வேட்புமனு தாக்கல் எதுவும் செய்யவில்லை.

"ஆபரேஷன் 50000" வெற்றி.. செந்தில் பாலாஜி கையில் "அசைன்மென்ட்".. அந்த 3 பேர்? ஸ்டாலின் கிரீன் சிக்னல்

மாற்றம்

மாற்றம்

இவர்கள் மூன்று பேருமே செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள். ஸ்டாலினிடம் இருந்து சிக்னல் வந்த பின்பே இவர்கள் வேட்புமனு தாக்கல் செய்ததாக கூறப்படுகிறது. கோவை மாவட்டத்தில், திமுகவுக்கு அமைப்பு ரீதியாக, கோவை வடக்கு-தெற்கு-கிழக்கு என 3 மாவட்டங்களும், கோவை மாநகர் மேற்கு-கிழக்கு என 2 மாவட்டங்களும் என 5 மாவட்ட செயலாளர்கள் திமுகவில் இருந்தனர். 5 மாவட்டங்களாக இருந்தது மூன்றாக பிரிக்கப்பட்டு கோவை தெற்கு, வடக்கு, மாநகரம் என்று அமைக்கப்பட்டது.

மாற்றம் ஏன்?

மாற்றம் ஏன்?

கோவையில் இந்த மாற்றத்தை செய்ய வேண்டும் என்பது முதல்வர் ஸ்டாலின் மற்றும் செந்தில் பாலாஜியின் கூட்டு திட்டம் என்று கூறப்படுகிறது. 5 மாவட்டங்கள் இருப்பதால் மோதல்தான் இருக்கிறதே ஒழிய வேலை நடப்பது இல்லை. 3 ஆக மாற்றலாம் என்று கூட்டாக இவர்கள் முடிவு செய்துள்ளனர். அதன்படியே இந்த மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதோடு இப்போது மாவட்ட செயலாளர்களுக்கான வேட்புமனுவும் தாக்கல் செய்யப்பட்டுவிட்டது.

செந்தில் பாலாஜி

செந்தில் பாலாஜி

இந்த தேர்தலில் தற்போது செந்தில் பாலாஜியின் கை ஓங்கி இருப்பதால் அதிமுக அப்செட்டில் இருக்கிறதாம். ஏற்கனவே கொங்கு மண்டலத்தில் திமுக சார்பாக செந்தில் பாலாஜிதான் வலுவாக இருக்கிறார். கடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் செந்தில் பாலாஜி மூலம்தான் கோவையை திமுக ஸ்வீப் செய்தது. ஆனால் அப்போது திமுகவிலேயே சிலர் செந்தில் பாலாஜிக்கு எதிராக வேலை பார்த்ததாக கூறப்பட்டது. கோவையை சேர்ந்த சிலர் செந்தில் பாலாஜி வெளியூர்காரர் என்பதால் அவருக்கு எதிராக வேலை பார்த்ததாக கூறப்பட்டது.

கரூர்

கரூர்

ஆனால் அப்போதே செந்தில் பாலாஜி கரூரில் இருந்து ஆட்டக்காரர்களை இறக்கி தேர்தல் வேலைகளை பார்த்தார். இதன் மூலம் அதிமுகவை காலி செய்து திமுக மாபெரும் வெற்றியை பெற்றது. ஆனால் இந்த முறை மொத்தமாக கோயம்புத்தூர் செந்தில் பாலாஜி வசம் செல்லும் அறிகுறிகள் தெரிந்துள்ளன. மூன்று மாவட்ட செயலாளர்களுக்கான வேட்பாளர்களும் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கோவை அவரின் கட்டுப்பாட்டில் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

மாற்றம்

மாற்றம்

இது போக 5 அமைப்பு ரீதியான கோவை மாவட்டங்களில் 2 நீக்கப்பட்டு 3 மாவட்டங்களாக குறைக்கப்பட்டு இருக்கிறது. இதுவும் அதிமுகவை அதிர வைத்துள்ளது. இதன் மூலம் உட்கட்சி பூசல் இன்று திமுக எளிதாக வேலை பார்க்க முடியும் என்றும் கூறப்படுகிறது. அவர் கோவையை மொத்தமாக பிடித்துவிட்டார்.. இங்கே எங்கள் ஆட்களால் காசையே வெளியே எடுக்க முடியவில்லை. இனி கஷ்டம்தான் என்று செந்தில் பாலாஜியின் எழுச்சியை அதிமுகவினரே புலம்பலாக தெரிவித்து வருகின்றனர்.

English summary
Why AIADMK is upset with Senthil Balaji supporters taking over Coimbatore in DMK?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X