பார்த்த உடனே யானைக்கு வந்த பெருங்கோபம்.. கோவை அருகே ஆடிட்டர் தோட்டத்தில் அவ்வளவு ஆவேசம்
கோவை: கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரை அடுத்த சிங்கம்பதி, சாடிவயல், வெள்ளியங்கிரி கோவில், ஆலந்துறை, நரசீபுரம், புலகண்ட், விரயூர், இருட்டு பள்ளம், மருதமலை அடிவாரம் போன்ற மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இந்நிலையில் முட்டத்துயல் என்ற பகுதியில் நேற்று முன்தினம் காட்டு யானை ஒன்று அட்டகாசம் செய்துள்ளது.
கோவையை அடுத்த பேரூர் செம்மேடு பகுதியை சேர்ந்த ஆடிட்டர் குரு. இவருக்கு தொண்டாமுத்தூரை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி, முட்டத்துவயல் பகுதியில் தோட்டம் ஒன்று உள்ளது. இவர் தோட்டத்தில் பாதுகாப்பிற்காக வேட்டை நாய்களை வளர்த்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று ஆடிட்டர் குருவின் தோட்டத்துக்குள் புகுந்திருக்கிறது. அந்த யானை உணவுக்காக தோட்டத்தில் ஏதாவது கிடைக்குமா என்று தேடி பார்த்திருக்கிறது. ஆனால் எதுவும் கிடைக்கவில்லை. அப்போது தோட்டத்தில் இருந்த வளர்ப்பு நாய்கள் தொடர்ந்து குரைத்துக் கொண்ட இருந்தன. இதனால் ஆத்திரம் அடைந்த காட்டு யானை வளர்ப்பு நாய்களை துரத்தி தாக்க பார்த்தது. உடனே நாய்கள் குரைத்துக் கொண்டே அங்கும் இங்கும் சிதறி ஓடின.
தொடர்ந்து உணவு கிடைக்காத ஆத்திரத்தில் இருந்த யானை, அங்கிருந்த சைக்கிளை மிதித்து சேதப்படுத்தியது. அதன்பின்னர் கால்நடைகள் குடிக்க கேனில் வைத்திருந்த தண்ணீரை காட்டு யானை குடித்துள்ளது. பின்னர் கேனை காலால் மிதித்து நசுக்கியுள்ளது. இதைத்தொடர்ந்து தோட்டத்தில் வைத்திருந்த புண்ணாக்கு மூட்டையை காட்டு யானை துதிக்கையால் தூக்கி எறிந்தது. இப்படி காட்டு யானை தோட்டத்தையே துவம்சம் செய்து கொண்டிருந்ததால். தோட்டத்தில் பணியாற்றிய ஊழியர்கள் பயந்து போனார்கள்.
அங்கிருந்தோர் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. அதேநேரம் காட்டுயானையின் அட்டகாசம் குறித்து போளுவாம்பட்டி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் பட்டாசுகளை வெடித்து காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டினார்கள். இந்நிலையில் தோட்டத்தில் புகுந்து காட்டு யானை அட்டகாசம் செய்த சம்பவம் சாடிவயல், முட்டத்துவயல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
வெள்ளியங்கிரி மலையில் மீண்டும் சோகம்.. முதல் மலையிலேயே மூச்சுத்திணறி பக்தர் உயிரிழப்பு! -
அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்திற்கு கூட வரலையே.. சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் பிரேக் அப்? -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications