Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோவை மருதமலைக்கு அதிகாலையிலேயே முதல் ஆளாக வந்த முரட்டு முருக பக்தன்.. நடந்ததை பாருங்க

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை மருதமலையில் புகழ் பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில் இருக்கிறது. இந்த கோயில் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது. இதன் காரணமாக இங்கு அடிக்கடி காட்டு யானைகள் வந்து செல்வது வழக்கம். காட்டுப்பன்றி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் மாலை நேரத்தில் உலா வருவதை பார்க்க முடியும். இந்த சூழலில் நேற்று அதிகாலையில் முருகன் கோவிலுக்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதிய நிலையில், காட்டு யானையும் வந்துவிட்டது.. இதனால் பக்தர்கள் பீதியடைந்தனர்.

கோவை மருதமலையில் பிரசித்திபெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்திருக்கிறது. முருகனின் ஏழாவது வீடு என்று போற்றப்படும் இந்த கோவில் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. 1200 ஆண்டுகள் பழமையான இந்த கோயிலுக்கு அருகில் பாம்பாட்டி சித்தரின் குகைக்கோயில் அமைந்துள்ளது. வரலாற்று சிறப்புமிக்க பதினெட்டு சித்தர்களுள் ஒருவரான பாம்பாட்டி சித்தர், இந்த குகையில் சில காலம் வசித்து வந்துள்ளார் என்று நம்பப்படுகிறது.

Wild elephant strolling on the hill path of Maruthamalai Subramania Swamy Temple in Coimbatore

இங்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். மலைக்கு வரும் பக்தர்கள் மலைக்கு செல்வதற்காகவே உள்ள படியேறி கோவிலுக்கு நடந்து செல்கிறார்கள். நடந்து செல்ல இயலாதவர்களுக்காக கோயில் நிர்வாகம் மினி பேருந்துகளை இயக்கி வருகிறது. மருதமலை முற்றிலும் வனப்பகுதியில் உள்ள இடம் என்பதால், அடிக்கடி காட்டுயானைகள், காட்டுப்பன்றி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் வந்து செல்கின்றன. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் உள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை என்பதால் அதிகாலை முதலே கோவிலுக்கு பக்தர்கள் குவிந்தனர்.

இந்நிலையில் காலை 6 மணியளவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை மருதமலை அடிவார பகுதிக்கு வந்துவிட்டது. பின்னர் அந்த யானை மலைப்பாதை வழியாக மயில் மண்டபத்திற்கு சென்றது. தொடர்ந்து காட்டு யானை அந்த பகுதியில் உலாவிக்கொண்டிருந்தது. இதனால் பீதி அடைந்த பக்தர்கள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து வனத்துறையினர் காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் யானை வனப்பகுதிக்குள் செல்ல மறுத்து அங்கேயே உலாவியது. பின்னர் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு காட்டு யானையை வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விரட்டினர்.
காட்டு யானை வனப்பகுதிக்குள் சென்றபிறகு மலைக்கோவிலுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் மலையடிவாரத்தில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டது. இதனிடையே மருதமலை கோவில் பகுதியில் அடிக்கடி காட்டு யானைகள் வருவதால், மலைக்கோவிலுக்கு அதிகாலையில் வரும் பயணிகள் கவனமாக இருப்பது நல்லது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+