கோவை மருதமலைக்கு அதிகாலையிலேயே முதல் ஆளாக வந்த முரட்டு முருக பக்தன்.. நடந்ததை பாருங்க
கோவை: கோவை மருதமலையில் புகழ் பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில் இருக்கிறது. இந்த கோயில் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது. இதன் காரணமாக இங்கு அடிக்கடி காட்டு யானைகள் வந்து செல்வது வழக்கம். காட்டுப்பன்றி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் மாலை நேரத்தில் உலா வருவதை பார்க்க முடியும். இந்த சூழலில் நேற்று அதிகாலையில் முருகன் கோவிலுக்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதிய நிலையில், காட்டு யானையும் வந்துவிட்டது.. இதனால் பக்தர்கள் பீதியடைந்தனர்.
கோவை மருதமலையில் பிரசித்திபெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்திருக்கிறது. முருகனின் ஏழாவது வீடு என்று போற்றப்படும் இந்த கோவில் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. 1200 ஆண்டுகள் பழமையான இந்த கோயிலுக்கு அருகில் பாம்பாட்டி சித்தரின் குகைக்கோயில் அமைந்துள்ளது. வரலாற்று சிறப்புமிக்க பதினெட்டு சித்தர்களுள் ஒருவரான பாம்பாட்டி சித்தர், இந்த குகையில் சில காலம் வசித்து வந்துள்ளார் என்று நம்பப்படுகிறது.

இங்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். மலைக்கு வரும் பக்தர்கள் மலைக்கு செல்வதற்காகவே உள்ள படியேறி கோவிலுக்கு நடந்து செல்கிறார்கள். நடந்து செல்ல இயலாதவர்களுக்காக கோயில் நிர்வாகம் மினி பேருந்துகளை இயக்கி வருகிறது. மருதமலை முற்றிலும் வனப்பகுதியில் உள்ள இடம் என்பதால், அடிக்கடி காட்டுயானைகள், காட்டுப்பன்றி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் வந்து செல்கின்றன. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் உள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை என்பதால் அதிகாலை முதலே கோவிலுக்கு பக்தர்கள் குவிந்தனர்.
இந்நிலையில் காலை 6 மணியளவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை மருதமலை அடிவார பகுதிக்கு வந்துவிட்டது. பின்னர் அந்த யானை மலைப்பாதை வழியாக மயில் மண்டபத்திற்கு சென்றது. தொடர்ந்து காட்டு யானை அந்த பகுதியில் உலாவிக்கொண்டிருந்தது. இதனால் பீதி அடைந்த பக்தர்கள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து வனத்துறையினர் காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் யானை வனப்பகுதிக்குள் செல்ல மறுத்து அங்கேயே உலாவியது. பின்னர் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு காட்டு யானையை வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விரட்டினர்.
காட்டு யானை வனப்பகுதிக்குள் சென்றபிறகு மலைக்கோவிலுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் மலையடிவாரத்தில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டது. இதனிடையே மருதமலை கோவில் பகுதியில் அடிக்கடி காட்டு யானைகள் வருவதால், மலைக்கோவிலுக்கு அதிகாலையில் வரும் பயணிகள் கவனமாக இருப்பது நல்லது.
-
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்? -
ஜனநாயகன் ரூ.500 கோடி பட்ஜெட் படம்! HD பிரிண்ட்டில் வெளியானது எப்படி? தமிழக டிஜிபியிடம் புகார்












Click it and Unblock the Notifications