"போதை" ஏறி போச்சு.. யூடியூபை பார்த்து போதை மருந்து தயாரிக்கும் கோவை இளைஞர்கள்.. வைரல் வீடியோ
கோவை: கோவை மாவட்டத்தில் போதை ஊசியை போடும் இளைஞர்களின் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
கோவை மாவட்டத்தில் இரவு நேரத்தில் இளைஞர் சிலர் போதை ஊசியை செலுத்தி கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோவில் இளைஞர்கள் அவர்களாகவே போதை மருந்துகளை பொடியாக்கி அதனை நீரில் கரைத்து ஊசியின் மூலம் நரம்பில் செலுத்திக் கொள்ளும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

அந்த குழுவினர்
இதனை அங்கிருந்த ஒருவர் (குழுவை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது) வீடியோ எடுத்துள்ளார். அதில் சிலரது பெயர்களும் கூறி இருக்கும் ஆடியோவும் பதிவாகியுள்ளது. அதில் இளைஞர்கள் ஆபாச வார்த்தைகளையும் பேசியுள்ளனர்.

வாட்ஸ் ஆப் குழு
இந்த வீடியோவானது தற்பொழுது வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற சம்பவங்களை தடுக்க இரவு நேரங்களில் காவல் துறையினர் இந்த பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யூடியூப் மூலம்
மேலும் இந்த இளைஞர்கள் யூடியூப் மூலம் எப்படி போதை ஊசியை தயாரிப்பது என பார்த்து அதை அப்படியே செய்வதாகவும் புகார்கள் எழுந்துள்ளது. இது போல் போதை ஊசிகளை செலுத்திக் கொள்வதால் மரணம் நிகழ வாய்ப்பிருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கிறார்கள்.

நல்லது
யூடியூப் மூலம் நல்லதை பார்த்துக் கற்று கொள்ளாமல் இது போல் தீயதையும் உயிரையே எடுக்கும் விஷயங்களையும் கற்று கொள்கிறார்களே என மக்கள் கவலையடைந்துள்ளனர். இது போன்ற கேடு விளைவிக்கும் யூடியூப் வீடியோக்களை முடக்கவும் கோரிக்கை எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications