30 குழந்தைகளுடன் 317 ஈழத் தமிழர்கள் கனடா சென்ற கப்பல் பிலிப்பைன்ஸ் அருகே கடலில் மூழ்குகிறதா?
கொழும்பு: இலங்கையில் இருந்து 317 ஈழத் தமிழர் தப்பி அகதிகளாக கனடாவுக்கு சென்ற கப்பல், பிலிப்பைன்ஸ் அருகே சூறாவளி காற்றால் கடலில் மூழ்கிக் கொண்டிருப்பதாக சில உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
இலங்கையில் 2009-ம் ஆண்டுடன் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்தது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் 2009-ல் ஆயுதங்களை மவுனித்த பின்னர் எந்த ஒரு அரசியல், ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை.
இருந்தபோதும் இலங்கையில் தமிழர் பகுதியில் பல்வேறு அடக்குமுறைகள் தொடருகின்றன. இதனால் இலங்கையில் இருந்து ஈழத் தமிழர்கள் பல்வேறு நாடுகளுக்கு தொடர்ந்து அகதிகளாக வெளியேறி வருகின்றனர். தமிழகத்துக்கும் ஈழத் தமிழர்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றனர்.

இந்தப் பின்னணியில் சமூக வலைதளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது. இதன் உண்மைத்தன்மை உறுதிப்படுத்தப்பட முடியவில்லை. அதில், இலங்கை அகதிகளை ஏற்றிச் சென்ற கப்பல் காற்றினால் தாக்கப்பட்டு, பிலிப்பைன்ஸ் மற்றும் வியாட்நாமுக்கு இடையே மூழ்கிக் கொண்டிருக்கிறது.அரசியல்வாதிகள் இதை கருத்தில் கொண்டு தேவைப்படும் மக்களுக்கு உதவுங்கள். தயவுசெய்து இந்த செய்தியை ஐ.நா க்கு கூடிய விரைவில் பகிரவும் என இடம்பெற்றுள்ளது. இந்த தகவலை அடிப்படையாக வைத்து சர்வதேச செய்தியாளர் Frances Harrison இதனை உறுதிப்படுத்த முடியுமா? என கேள்வி கேட்டுள்ளார்.

2010-ம் ஆண்டு அதாவது இலங்கையில் யுத்தம் முடிவடைந்த பின்னர், 500 ஈழத் தமிழர்கள் கனடாவுக்கு கப்பல் ஒன்றில் அகதிகளாக சென்றனர். எம்வி சன் சீ என்ற பெயரிலான அந்தக் கப்பலில் கனடா சென்றனர். அதேபோல் கடந்த ஆகஸ்ட் மாதம் 76 ஈழத் தமிழர்கள் கனடாவுக்கு கப்பல் மூலம் அகதிகளாக சென்றனர்.
இதன் தொடர்ச்சியாக மற்றொரு ஈழத் தமிழர் கப்பல் தொடர்பான தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதேநேரத்தில் 2010-ம் ஆண்டு ஊடகங்களில் அடிபட்ட சன் சீ கப்பல் படங்களே தற்போதும் பகிரப்படுவதாக சிலர் சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர். இதனால் ஈழத் தமிழர் பயணித்த கப்பல் கடலில் மூழ்குகிறதா? என்ற செய்தி உறுதிப்படுத்த முடியாத ஒன்ராக இருக்கிறது.
(குறிப்பு: இச்செய்தியில் இணைக்கப்பட்ட படம் 2010-ம் ஆண்டு ஈழத் தமிழர்களுடன் கனடா சென்ற சன் சீ கப்பல்)
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications