Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இலங்கை ஜனாதிபதியும் தப்பி ஓட்டம்.. பிரதமரும் ராஜினாமா- அதிஉச்ச அரசியல் குழப்பத்துக்கு என்ன தீர்வு?

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: இலங்கை அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத மிக உச்சகட்டமான குழப்பம் நிலவுகிறது. நாட்டின் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே தப்பி ஓடிவிட்டார்; இடைக்கால பிரதமராக பதவியேற்ற ரணில் விக்கிரமசிங்கே பதவி விலகுவதாக அறிவித்துவிட்டார். இன்னொரு பக்கம் ராணுவமோ அமைதி காக்கிறது; இந்த நிலையில் இலங்கையில் அடுத்து என்னதான் நடக்கும் என்பது உலக நாடுகளின் கவனிப்பாக இருக்கிறது.

இலங்கையில் அரசு கஜானாவை சூறையாடிய ராஜபக்சே குடும்பத்தால் அந்நாட்டின் பொருளாதாரமே அழிந்து போனது; ஒட்டுமொத்த நாட்டின் பொருளாதாரம் பேரழிவு நிலைக்குப் போனது. இதனால் கொதித்து எழுந்த மக்கள், எந்த ராஜ்பக்சேக்களை தெய்வமாக கொண்டாடினார்களோ அதே ராஜபக்சேக்களை ஓட ஓட விரட்டி அடித்து வருகின்றனர். சர்வாதிகாரிகளின் சாம்ராஜ்ஜியங்கள் வீழ்ந்த சரித்திரங்கள் இப்போது நிகழ்காலத்தில் இலங்கையில் கண்முன்னே அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

After Gotabaya Rajapaksa resign what will happen in Srilanka?

இலங்கையில் தற்போது ஜனாதிபதி பதவியில் இருந்து கோத்தபாய ராஜபக்சே பதவி விலகுவதாக அறிவித்துவிட்டார்; இடைக்கால பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவும் பதவி விலகுவேன் என்று சொல்லிவிட்டார். இதனால் இலங்கை அரசியலில் அடுத்ததாக என்ன நடக்க வாய்ப்புகள் உள்ளன? இலங்கையின் அரசியல் சாசனப்படி அடுத்து என்ன நடக்க வேண்டும்?

  • ஜனாதிபதி பதவி விலகினால் அடுத்த 3 நாட்களுக்குள் நாடாளுமன்றம் கட்டாயம் கூட்டப்பட வேண்டும்.
  • நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் ராஜினாமா அறிவிப்பை நாடாளுமன்ற செயலாளர் அறிவிக்க வேண்டும்
  • புதிய ஜனாதிபதி தேர்வு செய்வதற்கான வேட்புமனுக்களுக்கான தேதி அறிவிக்கப்படும்
  • புதிய ஜனாதிபதிக்கு ஒரே ஒரு எம்.பி. வேட்புமனுத் தாக்கல் செய்தால் அவரையே தற்காலிக ஜனாதிபதியாக நாடாளுமன்ற செயலாளர் அறிவிப்பார்; ஒன்றுக்கும் மேற்பட்டோர் மனுத் தாக்கல் செய்தார் எம்.பி.க்களை வைத்து தேர்தல் நடத்தப்படும்.
  • இலங்கையின் அரசியல் சாசனத்தின் படி தற்போதைய பிரதமரே இடைக்கால அல்லது தற்காலிக ஜனாதிபதியாவார்
  • தற்போது ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே பதவி விலகும் நிலையில் இயல்பாகவே பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே இடைக்கால ஜனாதிபதியாவார்
  • அப்போது அமைச்சர்களில் ஒருவர் தற்காலிக பிரதமராக நியமிக்கப்படுவார்
  • தற்போது பிரதமர் ரணிலும் பதவி விலகுவதால் இடைக்கால ஜனாதிபதியாக சபாநாயகர் பொறுப்பேற்கிறார். இனி சபாநாயகரை மையப்படுத்தியே இலங்கை அரசியல் நடவடிக்கைகள் இருக்கும்.
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+