ஸ்ரீ என்ற வார்த்தை எப்போது சேர்ந்ததோ!.. அப்போதே இலங்கைக்கு அழிவுகாலம்.. அறிவியலாளர் வேதனை
கொழும்பு: சிலோன் ஸ்ரீலங்கா என பெயர் மாறியதே அந்த நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட காரணமானதாகவும் தமிழ்- சிங்களத்தினர் இடையே மோதல் ஆரம்பித்ததாகவும் அறிவியலாளர் அனுரா சி பெரேரா தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கடந்த 2019 ஆம் ஆண்டு கொரோனா ஊரடங்கின்போது சுற்றுலா தலங்கள் எல்லாம் முடங்கியதால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதனால் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிவாயு பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. மேலும் விலைவாசியும் உயர்ந்தது.

இதையடுத்து கோத்தபய ராஜபக்சே, மகிந்த ராஜபக்சே ஆகியோரின் ஆட்சி கவிழ்ந்தது. பின்னர் புதிய அதிபராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றார். ஆனாலும் அங்கு இயல்பு நிலை திரும்பவில்லை என கூறப்பட்டது. இலங்கையில் உள்ள மக்கள் கடல் வழியாக தமிழகத்திற்கு வந்தனர். குழந்தைகள் குடிக்கும் பால் கூட விண்ணை முட்டும் விலைக்கு விற்றதால் தங்களால் சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் சூழல் இருப்பதாக கூறியிருந்தனர்.
இந்த நிலையில் இந்த பிரச்சினைகளுக்கு பெயர் மாற்றம்தான் காரணம் என அறிவியலாளர் அனுரா சி பெரேரா தெரிவித்துள்ளார். இவர் தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார். அவர் கூறுகையில், பண்டாரநாயக்க மற்றும் விஜயகுமாரதுங்க படுகொலை முதல் ஸ்ரீ என்ற பெயரில் தொடங்கும் அரசு நிறுவனங்கள் வரை திவால் நிலையை அடைந்தமைக்கும் பெயர் மாற்றமே காரணம். உதாரணமாக ஸ்ரீலங்கா ஷிப்பிங் கம்பெனி லிமிடெட், ஸ்ரீலங்கா டிரான்ஸ்போர்ட் போர்டு, ஸ்ரீலங்கா ரயில்வே துறை ஆகியவை திவாலானது.

இலங்கையின் கடைசி மன்னனின் பெயர் கூட ஸ்ரீவிக்கிரமசிங்க ராஜசிங்க. 1956 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தொடங்கப்பட்டது முதல் எங்கள் நாட்டுக்கு தீமையான காலம் ஆரம்பமானது. இதை தொடங்கியது எஸ்டபிள்யூஆர்டி பண்டாரநாயக்க. ஸ்ரீ என்ற சொல்லை வாகனங்களின் எண் பலகைகளுக்கு பயன்படுத்திய பின்னரே சிங்களர்கள் - தமிழர்கள் இடையே மோதல் போக்கு ஆரம்பித்தது.
இந்த மோதலின் போது ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டது. இந்த கட்சியின் நிறுவனர் மத போதகர் ஒருவரால் படுகொலை செய்யப்பட்டார். ஸ்ரீலங்கா என பெயரை மாற்றுவதற்கு முன்பு இந்த நாடு லங்கா, சிங்களே, தம்பாபண்ணி, சேரான்திப், தப்ரோபனே, சேலான், சிலோன், ஹெலாடிவா, தஹாம் திவைனை அல்லது லக்பிமா என ஸ்ரீ என்ற வார்த்தையே பயன்படுத்தாமல் இருந்தது. இவ்வாறு அறிவியல் ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications