Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஸ்ரீ என்ற வார்த்தை எப்போது சேர்ந்ததோ!.. அப்போதே இலங்கைக்கு அழிவுகாலம்.. அறிவியலாளர் வேதனை

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: சிலோன் ஸ்ரீலங்கா என பெயர் மாறியதே அந்த நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட காரணமானதாகவும் தமிழ்- சிங்களத்தினர் இடையே மோதல் ஆரம்பித்ததாகவும் அறிவியலாளர் அனுரா சி பெரேரா தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கடந்த 2019 ஆம் ஆண்டு கொரோனா ஊரடங்கின்போது சுற்றுலா தலங்கள் எல்லாம் முடங்கியதால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதனால் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிவாயு பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. மேலும் விலைவாசியும் உயர்ந்தது.

Astronomer says that the name change from Ceylon to Srilanka has caused destruction

இதையடுத்து கோத்தபய ராஜபக்சே, மகிந்த ராஜபக்சே ஆகியோரின் ஆட்சி கவிழ்ந்தது. பின்னர் புதிய அதிபராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றார். ஆனாலும் அங்கு இயல்பு நிலை திரும்பவில்லை என கூறப்பட்டது. இலங்கையில் உள்ள மக்கள் கடல் வழியாக தமிழகத்திற்கு வந்தனர். குழந்தைகள் குடிக்கும் பால் கூட விண்ணை முட்டும் விலைக்கு விற்றதால் தங்களால் சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் சூழல் இருப்பதாக கூறியிருந்தனர்.

இந்த நிலையில் இந்த பிரச்சினைகளுக்கு பெயர் மாற்றம்தான் காரணம் என அறிவியலாளர் அனுரா சி பெரேரா தெரிவித்துள்ளார். இவர் தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார். அவர் கூறுகையில், பண்டாரநாயக்க மற்றும் விஜயகுமாரதுங்க படுகொலை முதல் ஸ்ரீ என்ற பெயரில் தொடங்கும் அரசு நிறுவனங்கள் வரை திவால் நிலையை அடைந்தமைக்கும் பெயர் மாற்றமே காரணம். உதாரணமாக ஸ்ரீலங்கா ஷிப்பிங் கம்பெனி லிமிடெட், ஸ்ரீலங்கா டிரான்ஸ்போர்ட் போர்டு, ஸ்ரீலங்கா ரயில்வே துறை ஆகியவை திவாலானது.

Astronomer says that the name change from Ceylon to Srilanka has caused destruction

இலங்கையின் கடைசி மன்னனின் பெயர் கூட ஸ்ரீவிக்கிரமசிங்க ராஜசிங்க. 1956 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தொடங்கப்பட்டது முதல் எங்கள் நாட்டுக்கு தீமையான காலம் ஆரம்பமானது. இதை தொடங்கியது எஸ்டபிள்யூஆர்டி பண்டாரநாயக்க. ஸ்ரீ என்ற சொல்லை வாகனங்களின் எண் பலகைகளுக்கு பயன்படுத்திய பின்னரே சிங்களர்கள் - தமிழர்கள் இடையே மோதல் போக்கு ஆரம்பித்தது.

இந்த மோதலின் போது ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டது. இந்த கட்சியின் நிறுவனர் மத போதகர் ஒருவரால் படுகொலை செய்யப்பட்டார். ஸ்ரீலங்கா என பெயரை மாற்றுவதற்கு முன்பு இந்த நாடு லங்கா, சிங்களே, தம்பாபண்ணி, சேரான்திப், தப்ரோபனே, சேலான், சிலோன், ஹெலாடிவா, தஹாம் திவைனை அல்லது லக்பிமா என ஸ்ரீ என்ற வார்த்தையே பயன்படுத்தாமல் இருந்தது. இவ்வாறு அறிவியல் ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+