இலங்கை நாடாளுமன்ற கலைப்பு.. அறிவிப்பை வாபஸ் பெற சிறிசேனா முடிவு?
இலங்கை நாடாளுமன்றத்தை கலைப்பதாக அதிபர் சிறிசேனா அறிவித்ததை இன்று வாபஸ் பெற வாய்ப்பு உள்ளதாக அந்நாட்டில் இருந்து தகவல்கள் வருகிறது.
கொழும்பு: இலங்கை நாடாளுமன்றத்தை கலைப்பதாக அதிபர் சிறிசேனா அறிவித்ததை இன்று வாபஸ் பெற வாய்ப்பு உள்ளதாக அந்நாட்டில் இருந்து தகவல்கள் வருகிறது.
இலங்கையின் அதிபர் மைத்ரிபால சிறிசேனா, மகிந்த ராஜபக்சேவை பிரதமராக அறிவித்தார். இந்த நிலையில் அதற்கான நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பில் வெற்றிபெற முடியாது என்றவுடன் தேர்தலை சந்திக்க திட்டமிட்டு நாடாளுமன்றத்தை கலைத்தார் சிறிசேனா.

இதற்கு எதிராக ரணில் விக்ரமசிங்கே வழக்கு தொடுத்து இருந்தார். அதன்பின் அந்நாட்டு உச்ச நீதிமன்றம் நாடாளுமன்ற கலைப்பிற்கு இடைக்கால தடை விதித்தது. இதையடுத்து கூட்டப்பட்ட நாடாளுமன்றத்தில் ராஜபக்சேவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
ராஜபக்சேவிற்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிபெற்றது.இதில் ராஜபக்சே தனது பெரும்பான்மையை நிரூபிக்க தவறினார்.
ராஜபக்சவிற்கு பெரும்பான்மை இல்லை என்று அவரது ஆட்சி கலைக்கப்பட்டது. ஆனால் இலங்கையில் நாடாளுமன்றதத்தில் ரணில் விக்ரமசிங்கே முறையாக பிரதமராக பதவி ஏற்கவில்லை. இதனால் அங்கு தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது.
இந்த நிலையில் இலங்கை நாடாளுமன்றத்தை கலைப்பதாக அதிபர் சிறிசேனா அறிவித்ததை இன்று வாபஸ் பெற வாய்ப்பு உள்ளதாக அந்நாட்டில் இருந்து தகவல்கள் வருகிறது. இன்று இதற்கான அறிவிப்பை அவர் வெளியிட வாய்ப்புள்ளது.
சிறிசேனவின் இந்த திடீர் முடிவு, ரணில் விக்ரமசிங்கேவிற்கு ஆதரவாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இலங்கை நாடாளுமன்றத்தில் மீண்டும் பரபரப்பு நிலவி வருகிறது.
-
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!












Click it and Unblock the Notifications