Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கஷ்டமா இருக்கு! இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரிடம் இலங்கை முன்னாள் அமைச்சர் புகார்.. என்ன சொன்னார்?

Subscribe to Oneindia Tamil

கொழும்பு : இலங்கையில் தேர்தல்களை நடத்தாமல் அரசு இழுத்தடிப்புச் செய்து வருவதாகவும் இதனை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் எனவும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் இலங்கைக்கு சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கரை இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் சந்தித்து பேசினார்.

Delaying to conduct election! Former Sri Lankan Minister complains to Indian Foreign Minister

இந்த சந்திப்பின்போது இலங்கையில், அதிகாரப் பகிர்வுக்கான ஏற்பாடுகள் தொடர்பாக தமிழ் மற்றும் இஸ்லாமிய கட்சிகளுக்கிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் குறித்து ஜெய்ஷங்கரிடம் ரவூப் ஹக்கீம் விளக்கம் அளித்தார். அதிகாரப்பூர்வ அறிக்கைகளில் தமிழ், இஸ்லாமியர்களை உள்ளடக்கி தமிழ்பேசும் மக்கள் என்ற வார்த்தை பிரயோகத்தை பயன்படுத்த வேண்டும் என ரவூப் ஹக்கீம் வேண்டுகோள் விடுத்தார். இதனை கேட்ட அமைச்சர் ஜெய்ஷங்கர், இலங்கை இஸ்லாமியர்களின் இந்த வேண்டுகோளை ஏற்பதாக உறுதியளித்தார்.

இந்தியா - இலங்கை ஒப்பந்தத்தின்போது, இஸ்லாமியர்களின் கோரிக்கைகள் குறித்த விவகாரங்களில் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சி, தமிழர் தரப்பின் பிரச்சினைகள் குறித்து ஆழமான புரிந்துணர்வுடன் செயற்பட்டதாக தெரிவித்த ரவூப் ஹக்கீம். இஸ்லாமிய சமூகத்தின் விவகாரங்களில் தங்கள் கட்சி அக்கறையுடனும் நிதானமாகவும் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாக விளக்கமளித்தார்.

Delaying to conduct election! Former Sri Lankan Minister complains to Indian Foreign Minister

இலங்கையில் இந்தியாவின் உதவியுடன் அமல்படுத்தப்படும் மீன்பிடித் துறைமுக அபிவிருத்தி திட்டங்களில் மூதூர், ஒலுவில் போன்ற துறைமுகங்களையும் சேர்க்குமாறு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கரிடம் அவர் கோரிக்கை வைத்தார்.

Recommended Video

    Sri lanka Crisis: தமிழகத்தில் தஞ்சமாகும் தமிழர்கள் | OneIndia Tamil

    இந்த சந்திப்பு தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ரவூப் ஹக்கீம், "இரு நாடுகளுக்கு இடையிலான மத, கலாசார விவகாரங்களில் பல்வேறு இனங்கள் இந்திய துணைக் கண்டம் மற்றும் இலங்கையுடன் தொடர்புபடுத்தி வளர்ச்சியடைந்துள்ளன. இதனை மேம்படுத்துவதற்கு சகல மதங்களையும் முதன்மைப்படுத்திய தொடர்பு முறை ஒன்றை இந்தியா முன்னெடுக்கும் என்ற நம்பிக்கை இந்த சந்திப்பின்போது வெளிப்பட்டது." என்றார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+