கோத்தபாய ராஜ்பக்சே அண்டைநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டதாக தவறாக சொல்லிவிட்டேன்: சபாநாயகர் மஹிந்த யாப்பா
கொழும்பு: இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேறி அண்டை நாடு ஒன்றில் பதுங்கி உள்ளதாக தாம் தவறுதலாக கூறிவிட்டதாக அந்நாட்டு சபாநாயகர் மஹிந்த யாப்பா கூறியுள்ளார்.
இலங்கையில் ஜூலை 9-ந் தேதி மக்கள் கிளர்ச்சியின் புதிய உச்சமாக ஜனாதிபதி மாளிகையை கைப்பற்றினர். பொதுமக்கள் கட்டுப்பாட்டில் ஜனாதிபதி மாளிகை இருந்த போதும் அதற்கு முன்னரே ராணுவத்தின் உதவியுடன் கோத்தபாய ராஜபக்சே அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இலங்கை ராணுவத்திடம் தஞ்சமடைந்திருந்த கோத்தபாய வெளிநாட்டுக்கு தப்பி ஓடியதாக தகவல்கள் தெரிவித்தன. கொழும்பில் இருந்து தப்பிய கோத்தபாய ராஜபக்சே, திருகோணமலை துறைமுகத்துக்கு குடும்பத்துடன் சென்று கடற்படையிடம் தஞ்சமடைந்திருந்தார்.

பின்னர் குடும்பத்துடன் ரத்மலானை விமான நிலையத்துக்கு சென்ற கோத்தபாய ராஜபக்சே, அங்கிருந்து கொழும்பு சென்றுள்ளார். கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு கோத்தபாய ராஜபக்சே குடும்பத்துடன் சென்றதாகவும் அங்கிருந்தே வெளிநாட்டுக்கு தப்பி ஓடியதாகவும் கூறப்படுகிறது.
இதனை இலங்கை சபாநாயகர் மஹிந்த யாப்பா உறுதி செய்யும் வகையில் பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் மஹிந்த யாப்பா, அண்டை நாடு ஒன்றில் கோத்தபாய ராஜபக்சே தற்போது தங்கி உள்ளார். இலங்கைக்கு வரும் புதன்கிழமையன்று கோத்தபாய ராஜபக்சே திரும்ப உள்ளார் என்றார்.
இலங்கை பிரதமர் பதவியை ராஜினாமா செய்திருந்த மகிந்த ராஜபக்சே, சில நாட்கள் திருகோணமலையில் இலங்கை கடற்படை பாதுகாப்பில் இருந்தார். பின்னர் மாலத்தீவில் இந்திய தொழிலதிபருக்கு சொந்தமான சொகுசு பங்களாவில் பதுங்கி கிடந்தார்.
இந்நிலையில் தாம் பேட்டியில் தவறான தகவலைத் தெரிவித்துவிட்டதாக மஹிந்த யாப்பா விளக்கம் அளித்து மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். மஹிந்த யாப்பா திடீரென ஏன் மறுத்து பேசுகிறார் என்கிற விவாதமும் எழுந்துள்ளது.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications