கோத்தபாய ராஜ்பக்சே அண்டைநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டதாக தவறாக சொல்லிவிட்டேன்: சபாநாயகர் மஹிந்த யாப்பா
கொழும்பு: இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேறி அண்டை நாடு ஒன்றில் பதுங்கி உள்ளதாக தாம் தவறுதலாக கூறிவிட்டதாக அந்நாட்டு சபாநாயகர் மஹிந்த யாப்பா கூறியுள்ளார்.
இலங்கையில் ஜூலை 9-ந் தேதி மக்கள் கிளர்ச்சியின் புதிய உச்சமாக ஜனாதிபதி மாளிகையை கைப்பற்றினர். பொதுமக்கள் கட்டுப்பாட்டில் ஜனாதிபதி மாளிகை இருந்த போதும் அதற்கு முன்னரே ராணுவத்தின் உதவியுடன் கோத்தபாய ராஜபக்சே அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இலங்கை ராணுவத்திடம் தஞ்சமடைந்திருந்த கோத்தபாய வெளிநாட்டுக்கு தப்பி ஓடியதாக தகவல்கள் தெரிவித்தன. கொழும்பில் இருந்து தப்பிய கோத்தபாய ராஜபக்சே, திருகோணமலை துறைமுகத்துக்கு குடும்பத்துடன் சென்று கடற்படையிடம் தஞ்சமடைந்திருந்தார்.

பின்னர் குடும்பத்துடன் ரத்மலானை விமான நிலையத்துக்கு சென்ற கோத்தபாய ராஜபக்சே, அங்கிருந்து கொழும்பு சென்றுள்ளார். கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு கோத்தபாய ராஜபக்சே குடும்பத்துடன் சென்றதாகவும் அங்கிருந்தே வெளிநாட்டுக்கு தப்பி ஓடியதாகவும் கூறப்படுகிறது.
இதனை இலங்கை சபாநாயகர் மஹிந்த யாப்பா உறுதி செய்யும் வகையில் பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் மஹிந்த யாப்பா, அண்டை நாடு ஒன்றில் கோத்தபாய ராஜபக்சே தற்போது தங்கி உள்ளார். இலங்கைக்கு வரும் புதன்கிழமையன்று கோத்தபாய ராஜபக்சே திரும்ப உள்ளார் என்றார்.
இலங்கை பிரதமர் பதவியை ராஜினாமா செய்திருந்த மகிந்த ராஜபக்சே, சில நாட்கள் திருகோணமலையில் இலங்கை கடற்படை பாதுகாப்பில் இருந்தார். பின்னர் மாலத்தீவில் இந்திய தொழிலதிபருக்கு சொந்தமான சொகுசு பங்களாவில் பதுங்கி கிடந்தார்.
இந்நிலையில் தாம் பேட்டியில் தவறான தகவலைத் தெரிவித்துவிட்டதாக மஹிந்த யாப்பா விளக்கம் அளித்து மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். மஹிந்த யாப்பா திடீரென ஏன் மறுத்து பேசுகிறார் என்கிற விவாதமும் எழுந்துள்ளது.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications