இலங்கை ஈஸ்டர் தாக்குதல்களின் பின்னணியில் கோத்தபாய ராஜபக்சேதான்... அமைச்சர் ராஜிதசேனாரத்னா திடுக்
கொழும்பு: இலங்கை ஈஸ்டர் தாக்குதல்களின் பின்னணியில் மகிந்த ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபாய ராஜபக்சேதான் இருக்கிறார் என இலங்கை அமைச்சர் ராஜித சேனாரத்ன திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.
இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபாய ராஜபக்சே போட்டியிட உள்ளார். இதற்காக தற்போதைய அரசாங்கம் மீது அதிருப்தியை உருவாக்கும் வகையில்தான் மோதல்களுக்கு வித்திடுகிறது ராஜபக்சே குடும்பம் என்பது நீண்டகால குற்றச்சாட்டு.

ஈஸ்டர் தாக்குதல்களிலும் ராஜபக்சே குடும்பத்துக்கு தொடர்பிருப்பதாக கூறப்பட்டது. இந்த தாக்குதல்களைத் தொடர்ந்து கோத்தபாய பேசிய அரசியல் பேச்சுகள் எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பதாகவே இருந்தது.
இந்நிலையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமைச்சர் ராஜித சேனாரத்ன பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டார். ஈஸ்டர் தாக்குதல்களுக்கு கோத்தபாய ராஜபக்சேதான் பொறுப்பேற்க வேண்டும் என்றார்.
ஏனெனில் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 26 பேருக்கு ஊதியம் கொடுத்து வந்தவர் கோத்தபாய ராஜபக்சேதான். ஆகையால்தான் இத்தாக்குதல்களுக்கு அவரே பொருப்பேற்றாக வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications