இலங்கை விமானப் படையின் 70-வது ஆண்டு- கொழும்பு வான்பரப்பில் சாகசம் நிகழ்த்திய இந்திய விமானங்கள்
கொழும்பு: இலங்கை விமானப் படையின் 70-வது ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு கொழும்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய விமானங்கள் வான்பரப்பில் சாகசங்களை நிகழ்த்தின.
கொழும்பு காலிமுகத்திடலில் விமானப் படையின் 70-வது ஆண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இலங்கையின் அழைப்பின் பேரில் இந்திய விமான படை தளபதி ஆர்கேஎஸ் பதௌரியா இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்சே, பாகிஸ்தான், வங்கதேசம், அமெரிக்காவின் பசுபிக் பிராந்திய தளபதிகளும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்திய விமானப் படை ஹெலிகாப்டர்கள் கொழும்பு நகரில் தாழப் பறந்து விமான சாகசங்களை தொடங்கி வைத்தன.
அடுத்ததாக இந்திய விமானப் படையின் தேஜஸ் விமானங்கள் வான்பரப்பில் சாகம் நிகழ்த்தின. சூரிய கிரண் சாகச அணியின் 9 விமானங்கள் கூட்டாக சாகம் நிகழ்த்தின. இந்தியாவின் 23 விமானங்கள் இந்த சாகச நிகழ்ச்சியில் பங்கேற்றன












Click it and Unblock the Notifications