யாழ்ப்பாணம் விடுதலைப் புலிகள் வசமாவதைத் தடுக்க உதவியது பாக்.:இலங்கை வெளியுறவு செயலர் ஜயநாத் கொலம்பகே
கொழும்பு: யாழ்ப்பாணத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் கைப்பற்றுவதைத் தடுக்க உதவியது பாகிஸ்தான் ராணுவம்தான் என்று இலங்கை வெளியுறவுத் துறை செயலாளர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
இலங்கையில் மகிந்த ராஜபக்சே பிரதமராகப் பொறுப்பேற்ற நிலையில் பாதுகாப்புத் துறை அமைச்சர் பதவி, அதிபர் (ஜனாதிபதி) கோத்தபாய ராஜபக்சேவுக்கு ஒதுக்கப்பட்டது. இதனையடுத்து இலங்கையின் புதிய வெளியுறவுத் துறை செயலாளராக முன்னாள் ராணுவ தளபதி ஜயநாத் கொலம்பகே நியமிக்கப்பட்டார்.
புதிய செயலராகப் பதவியேற்ற ஜயநாத் கொலம்பகே ஊடகங்களுக்கு அளித்து வரும் பேட்டிகளில், வெளியுறவு கொள்கைகளில் இந்தியாவுக்கே முதலிடம் என்ற கோட்பாடை பின்பற்றுவோம் என கூறி வருகிறார். மேலும் இந்தியாவின் பிராந்திய நலன்களுக்கும் கேந்திர பாதுகாப்புக்கும் இலங்கை ஒருபோதும் எதிராக இருக்காது என்றும் ஜயநாத் கொலம்பகே குறிப்பிட்டிருந்தார்.

இந்தியா, பாக். நட்பு நாடுகள்
இதனிடையே கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பாகிஸ்தான் தொடர்பான கேள்விக்கு ஜயநாத் கொலம்பகே கூறி இருப்பதாவது: தெற்காசியாவைப் பொறுத்தவரையில் இந்தியாவும் பாகிஸ்தானும் பிரச்சனைகளை எதிர்கொண்டிருக்கின்றன. இருநாடுகளுமே எங்களது நட்பு நாடுகள்தான்.

புலிகளிடம் வீழ காத்திருந்த யாழ்.
இலங்கையின் மிகவும் சிக்கலான தருணங்களில் இருநாடுகளுமே உதவியும் இருக்கின்றன. யுத்த களத்தில் ஒருமுறை இலங்கையின் வடக்கு பகுதியான யாழ்ப்பாணத்தை இலங்கை ராணுவம் கைவிட வேண்டிய நெருக்கடியை விடுதலைப் புலிகள் தாக்குதல்கள் மூலம் உருவாக்கி இருந்தனர்.

இலங்கைக்கு உதவிய பாக்.
அந்த நேரத்தில் பாகிஸ்தான் ராணுவமானது பல்குழல் ராக்கெட் லாஞ்சர்கள் (Multi-barrel rocket launchers)களை இலங்கைக்கு அனுப்பி வைத்தது. அந்த உதவியின் மூலம் விடுதலைப் புலிகள் கைகளில் யாழ்ப்பாணம் விழுவதை தடுத்து நிறுத்தப்பட்டது. இருப்பினும் இலங்கையை எந்த ஒருநாடும் இன்னொரு நாட்டுக்கு எதிரான தளமாக பயன்படுத்த நாங்கள் அனுமதிக்கமாட்டோம். இருநாடுகளுமே எங்களுக்கு முக்கியம்.

இந்தியாவுக்கே முதலிடம்
இந்தியா எங்களது அண்டைநாடு. அதனால்தான் இந்தியாவுக்கே முதலிடம் என்கிற வெளியுறவு கொள்கையை பின்பற்றுவதாக கூறுகிறோம். அதாவது இந்தியாவின் கேந்திர பாதுகாப்புக்கு ஆபத்து விளைவிக்கும் எந்த ஒரு செயலையும் இலங்கை ஒருபோதும் செய்யாது என்பதுதான் அதன் அர்த்தம். இவ்வாறு ஜயநாத் கொலம்பகே கூறியுள்ளார்.
-
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications