கொழும்பு தேவாலயத்தில் ஈஸ்டர் நாள் தாக்குதலில் பலியானோருக்கு மோடி அஞ்சலி!
கொழும்பு: இலங்கை சென்ற பிரதமர் நரேந்திர மோடி, கொழும்பு புனித அந்தோணியார் தேவாலயத்தில் ஈஸ்டர் நாள் தாக்குதலில் பலியானோருக்கு மலரஞ்சலி செலுத்தினார்.
2014-ம் ஆண்டு பிரதமராக மோடி பதவியேற்ற போது அந்த விழாவுக்கு சார்க் நாடுகளின் தலைவர்களை அழைத்திருந்தார். பின்னர் பாகிஸ்தானுக்கு திடீர் பயணம் மேற்கொண்டார். ஆனால் நேபாளம், மாலத்தீவு, இலங்கை உள்ளிட்ட அண்டை நாடுகள் மீதான இந்திய அரசின் பிடி 5 ஆண்டுகளில் தளர்ந்தது என்பதுதான் யதார்த்தம்.

மோடி ஆட்சிக் காலத்தின் கடைசியில் மாலத்தீவில் இந்திய ஆதரவு அதிபர் வெற்றி பெற்றார் இதுதான் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையிலான ஒரே ஆறுதலாக இருந்தது. இந்த நிலையில் மீண்டும் பிரதமராக பதவியேற்ற மோடி இம்முறை வங்கக் கடல் சார்பு நாடுகளின் கூட்டமைப்பான பிம்ஸ்டெக்கின் தலைவர்களை அழைத்திருந்தார்.
Started the Sri Lanka visit by paying my respect at one of the sites of the horrific Easter Sunday Attack, St. Anthony's Shrine, Kochchikade.
— Narendra Modi (@narendramodi) June 9, 2019
My heart goes out to the families of the victims and the injured. pic.twitter.com/RTdmNGcDyg
இதனைத் தொடர்ந்து தமது 2-வது பதவி காலத்தில் முதல் முறையாக மாலத்தீவுக்கு பயணம் மேற்கொண்டார் மோடி. இதைத் தொடர்ந்து இன்று இலங்கைக்கு குறுகிய பயணமாக சென்றடைந்தார் மோடி.
Sri Lanka: Prime Minister Narendra Modi arrives in Colombo, received by Sri Lankan Prime Minister Ranil Wickremesinghe pic.twitter.com/OjRRHRnPf1
— ANI (@ANI) June 9, 2019
அவரை கொழும்பு விமான நிலையத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே வரவேற்றார். முன்னதாக மரபுகளை மீறி மோடியை அதிபர் சிறிசேனாவே கொழும்பு விமான நிலையத்தில் வரவேற்க உள்ளதாக கூறப்பட்டதால் குழப்பம் ஏற்பட்டது.
பின்னர் கொழும்பு கொச்சிக்கடையில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயத்துக்கு சென்ற மோடி, ஈஸ்டர் நாள் தாக்குதலில் பலியானோருக்கு மலரஞ்சலி செலுத்தினார். இதனைத் தொடர்ந்து அதிபர் மாளிகையில் மோடிக்கு முப்படை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் அதிபர் சிறிசேனாவுடன் இருதரப்பு உறவுகள் குறித்து விவாதித்தார் மோடி.
-
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு! -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு












Click it and Unblock the Notifications