பிதாவே இவர்களை மன்னியும்.. இலங்கை குண்டு வெடிப்பு கொடுமையை உணர்த்த இந்த ஒரு படம் போதும்!
Recommended Video
கொழும்பு: இலங்கை வெடிகுண்டு தாக்குதலின் தாக்கத்தை மக்கள் மனதில் பதிய வைக்க இந்த ஒரு சக்தி வாய்ந்த படம்போதும் என்று, கூறி சமூக வலைத்தளத்தில் ஒரு போட்டோ வைரலாக சுற்றி வருகிறது.
ஈஸ்டர் திருநாளான இன்று, இலங்கையில் தேவாலயங்கள் மற்றும், வெளிநாட்டினர் தங்கியிருக்கும் நட்சத்திர ஹோட்டல்களை குறி வைத்து அடுத்தடுத்து தீவிரவாதிகள் குண்டு வெடிப்புகளை நிகழ்த்தினர்.
இதில் தேவாலய பிரார்த்தனைகளில் பங்கேற்க சென்ற கிறிஸ்தவர்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களின் ரத்தம் தேவாலயத்திலுள்ள ஏசுநாதர் சிலை ஒன்றில் தெறித்துள்ளது. இந்த புகைப்படம்தான் வைரலாகியுள்ளது.
On a #Eastersunday "Father, forgive them, for they do not know what they do." A powerful image of the #risenchrist #EasterSundayAttacksLK pic.twitter.com/5W5b5VEVvC
— Raghu B (@JBRBALA) April 21, 2019
ஏசுநாதரை சிலுவையில் அறைந்தபோது, "பிதாவே, இவர்களை மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே " என்று ஏசுநாதர் பெருமனதோடு, தெரிவித்தார் என்பது நம்பிக்கை. இப்போது இந்த புகைப்படத்திற்கும், அதே வரிகள் பொருந்துவதாக கூறுகிறார் இந்த நெட்டிசன்.
எனவேதான் இந்த புகைப்படம் இன்றைய நாளின் சக்தி வாய்ந்த புகைப்படமாக பார்க்கப்படுகிறது.