இலங்கை அதிபர் தேர்தல்: ரணிலின் வேட்பாளர் கனவு 'டமால்'.. களத்தில் சஜித பிரேமதாச
Recommended Video
கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் ரணிலின் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளராக சஜித பிரேமதாச போட்டியிட உள்ளார்.
இலங்கை அதிபர் தேர்தல் நவம்பர் 16-ல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் மகிந்த ராஜபக்சேவின் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக கோத்தபாய ராஜபக்சே போட்டியிடுகிறார்.

ஜேவிபி உள்ளிட்ட கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்திருக்கின்றன. பிரதமர் ரணிலின் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் யார் என்பதில் குழப்பம் நீடித்தது.
ரணிலைப் பொறுத்தவரையில் அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்பியதாக கூறப்பட்டது. அதேபோல் அதிபர் மைத்திரிபால சிறிசேனாவும் பொதுவேட்பாளராக களமிறங்கும் முயற்சிகளை மேற்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
ரணில் போட்டியிட்டால் தமிழர் வாக்குகளை அள்ள முடியும் என்பது அவரது நம்பிக்கை. ரணிலை போட்டியிடவிடாமல் சிறைக்கு அனுப்பினால் தாம் எளிதாக வெல்ல முடியும் என்பது சிறிசேனாவின் கணக்கு. ஆனால் இந்த இரண்டும் நிறைவேறாமல் போயிருக்கிறது.
தற்போது ஐக்கிய தேசியக் கட்சியில் சஜித பிரேமதாச வேட்பாளராக முன்னிறுத்தப்படுகிறார். முன்னாள் அதிபர் பிரேமதாசவின் மகன் சஜித என்பதும் குறிப்பிடத்தக்கது. தமது ஆதரவாளர்களை ஒன்றுதிரட்டி தமது பலத்தை வெளிப்படுத்தி அதிபர் வேட்பாளராக முன்னேறியிருக்கிறார் சஜித்.
களுத்துறை, மத்துகம பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் சஜித பங்கேற்று பேசுகையில், யாருடைய நிபந்தனைகளுக்கும் கட்டுப்பட்டு நான் அதிபர் வேட்பாளராகவில்லை. எனக்கு சுயமரியாதை இருக்கிறது என ஆவேசமாக ரணிலை மறைமுகமாக சாடி பேசினார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications