நாடாளுமன்றத்தை முடக்கியது.. பிரதமரின் செயலாளர் நீக்கம்.. சிறிசேனா அதிரடியின் பின்னணி என்ன?
கொழும்பு: நாடாளுமன்றத்தை திடீரென முடக்கியது, பிரதமரின் செயலாளர் நீக்கப்பட்டது ஆகியவற்றை பிறப்பித்த சிறிசேனாவின் உத்தரவின் சிறிசேனா- ராஜபக்ஷே கூட்டணிக்கு பலம் இல்லாததும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. அது போல் ஆதரவை திரட்ட ராஜபட்சவுக்கு கால அவகாசத்தை மறைமுகமாக கொடுப்பதாகவே பார்க்கப்படுகிறது.
இலங்கையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் அரசியல் மாற்றம் நிகழ்ந்துள்ளது. இந்த அதிரடி மாற்றத்தால் உலகத் தமிழர்கள் உறைந்து போயுள்ளனர்.
ஈழத் தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்ஷே இலங்கையின் பிரதமராக நியமனம் செய்யப்பட்டுள்ளதுதான் தற்போதைய கவலையாக உள்ளது.

ரணில் கட்சி கூட்டணி
ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சிதான் இலங்கை நாடாளுமன்றத்தில் தனி பெரும் கட்சியாகும். பெரும்பான்மை பலம் இல்லாததால் சிறிசேனாவின் ஐக்கிய மக்கள் சுதந்திர கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தது ரணில் கட்சி.

பெரும்பான்மையை நிரூபிக்க
இந்த நிலையில் பெரும்பான்மையே இல்லாத சிறிசேனா ரணிலை நீக்கிவிட்டு ராஜபக்ஷேவை பிரதமர் பதவியில் அமர்த்தியிருப்பது அரசியலமைப்புக்கு எதிரான செயலாகவே பார்க்கப்படுகிறது. மேலும் பெரும்பான்மை பலத்துடன் உள்ள ரணில் உடனடியாக நாடாளுமன்றத்தை கூட்டி ராஜபட்ச உடனடியாக பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ரணில் கோரிக்கை வைத்தார்.

பிரதமரின் செயலாளர் நீக்கம்
இதையடுத்து இன்று அவசர அவசரமாக இலங்கை நாடாளுமன்றத்தை நவம்பர் 16-ஆம் தேதி வரை தற்காலிகமாக மூட சிறிசேனா உத்தரவிட்டுள்ளார். அதுபோல் பிரதமரின் செயலாளராக இருந்த சமான் ஏகநாயகேவை நீக்க உத்தரவிட்டார்.

சிறிசேனாவின் உத்தரவின் பின்புலம் என்ன
நாடாளுமன்றத்தை முடக்கியது, பிரதமரின் செயலாளரை நீக்கியது என அடுத்தடுத்து சிறிசேனா செய்து வருவதை பார்த்தால் ராஜபக்ஷே- சிறிசேனா கூட்டணிக்கு பெரும்பான்மை இல்லை என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. மேலும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முன்னாள் அதிபர் ராஜபக்ஷேவுக்கு கால அவகாசத்தை மறைமுகமாக வழங்கியுள்ளார் சிறிசேனா.












Click it and Unblock the Notifications