சிலரை அடையாளம் கண்டுள்ளோம்.. குற்றவாளிகளை நெருங்கிவிட்டோம்.. இலங்கை பிரதமர் ரணில் அதிரடி!
இலங்கை குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு காரணமான சில நபர்களை அடையாளம் கண்டு இருக்கிறோம், என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.
Recommended Video
கொழும்பு: இலங்கை குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு காரணமான சில நபர்களை அடையாளம் கண்டு இருக்கிறோம், விரைவில் அனைவரையும் கைது செய்வோம் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.
இரண்டு நாட்களுக்கு ஈஸ்டர் அன்று இலங்கையில் கொடூரமான குண்டுவெடிப்பு தாக்குதல் நடைபெற்றது. இலங்கையில் அடுத்தடுத்து 3 தேவாலயங்கள், உட்பட 8 இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்து உள்ளது.
இந்த குண்டுவெடிப்பில் 320க்கும் அதிகமானோர் பலியானார்கள். இந்த தாக்குதல் குறித்து இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பேட்டி அளித்துள்ளார்.

என்ன பேட்டி
ரணில் விக்ரமசிங்கே தனது பேட்டியில், இந்த சம்பவம் தொடர்பான விசாரணை நடந்து வருகிறது. இதுவரை நடந்த விசாரணையில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது. விசாரணை சரியான திசையில் செல்வதாக தெரிகிறது.

என்ன விசாரணை
குற்றவாளிகளை நெருங்கி வருகிறோம். சில நபர்களை ஏற்கனவே அடையாளம் கண்டு இருக்கிறோம். விரைவில் அனைவரையும் கண்டுபிடிப்போம் என்று நம்புகிறேன். இலங்கைக்கு நிறைய நாடுகள் உதவி வருகிறது. இலங்கைக்கு உதவும் நாடுகள் அனைத்திற்கும் நன்றிகள்.

எப்போதும் ஒருமைப்பாடு
இலங்கையில் மத ஒருமைப்பாடு நிலவி வருகிறது. அதை குலைக்க முடியாது. அனைத்து மதத்தினரும் எங்களிடம் தொடர்பு கொண்டு தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள். எந்த தாக்குதலாலும் இலங்கையில் எங்களின் ஒற்றுமையை குலைக்க முடியாது, அவர்களால் எங்களிடம் மத பிளவை ஏற்படுத்த முடியாது. அதை பற்றி பேசுவது கூட அவசியமற்றது.

இலங்கை எப்படி
இலங்கைக்கு உதவுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அதேபோல் சர்வதேச போலீஸ் இலங்கையில் விசாரணையும் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் பலியானவர்களின் குடும்பத்திற்கு என்னுடைய இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications