இலங்கையில் ஈஸ்டர் தினத்தில் தாக்குதல் நடத்திய தற்கொலைதாரியின் மனைவி இந்தியாவில் தஞ்சம்?
கொழும்பு: இலங்கையில் ஈஸ்டர் நாளில் தேவாலயங்கள், நட்சத்திர ஹோட்டல்கள் மீது தாக்குதல் நடத்திய தற்கொலைதாரிகளில் ஒருவரின் மனைவி இந்தியாவில் தஞ்சம் அடைந்திருப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
இலங்கையில் கடந்த ஆண்டு ஏப்ரல் 21-ல் ஈஸ்டர் தினத்தில் தேவாலயங்கள் உள்ளிட்ட இடங்களில் அடுத்தடுத்து மனித வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இத்தாக்குதலில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இவர்களில் 11 பேர் இந்தியர்கள்.

சர்வதேசத்தையே அதிரச் செய்த இந்த பயங்கரவாத செயலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றது. இந்த இயக்கத்துடன் இணைந்து இலங்கையின் தேசிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு தாக்குதல்களை நடத்தியதும் அம்பலமானது.
இது தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இதனிடையே தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவரின் மனைவியான புலசாந்தினி ராஜேந்திரன் என்பவர் இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு தப்பி வந்துள்ளார் என்கின்றன இலங்கை தகவல்கள்.
கடல் மார்க்கமாக சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் அந்த பெண் நுழைந்துள்ளதாகவும் இலங்கை தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த பெண்ணை இலங்கைக்கு அனுப்பி வைத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
-
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு












Click it and Unblock the Notifications