Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இலங்கையில் பொதுமக்கள் கிளர்ச்சி- கோத்தபாய, மகிந்த ராஜபக்சே பதவி விலக கோரி தொடர் போராட்டம்

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: இலங்கை பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று அதிபர் கோத்தபாய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே, நிதி அமைச்சர் பசில் ராஜபக்சே பதவி விலக வலியுறுத்தி பொதுமக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனால் இலங்கை முழுவதும் பதற்றம் நிலவி வருகிறது.

கொரோனா பாதிப்பால் இலங்கையின் பொருளாதாரம் மிக மோசமான வீழ்ச்சியை சந்தித்தது. கொரோனா பரவலால் இலங்கையின் சுற்றுலாதுறை கடும் சரிவை எதிர்கொண்டது. இலங்கைக்கான அன்னிய செலாவணி வரத்து முற்றிலும் தடைபட்டுப் போனது.இலங்கையின் பண மதிப்பும் படு வீழ்ச்சி கண்டது.

 விலைவாசி உயர்வு

விலைவாசி உயர்வு

இலங்கையில் தற்போது அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணை முட்டி நிற்கிறது. ஒரு முட்டையின் விலை ரூ30க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ உருளைக் கிழங்கு ரூ300க்கும் 1 கிலோ பருப்பு ரூ250க்கும் ஒரு கிலோ சர்க்கரை ரூ250க்கும் விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் தத்தளித்து வருகின்றனர். இலங்கையில் சமையல் எரிவாயு கப்பல்களுக்கு பணல் செலுத்த முடியாததால் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. பெரும்பாலான ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளன. பொதுமக்களும் விறகு அடுப்புக்கு மாறி வருகின்றனர்.

கொழும்பில் பிரமாண்ட போராட்டம்

கொழும்பில் பிரமாண்ட போராட்டம்

இந்த நிலையில் தலைநகர் கொழும்பில் கோத்தபாய ராஜபக்சே, மகிந்த ராஜபக்சே பதவி விலக கோரி எதிர்க்கட்சியின் பிரமாண்டமான போராட்டம் நடத்தினர். இதில் பல லட்சக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றனர். இந்த போராட்டத்தின் போது கோத்தபாய, மகிந்த மற்றும் பசில் ராஜபக்சேக்களுக்கு படங்களை தீயிட்டும் கொளுத்தினர். ரொட்டி துண்டுகளை கைகளில் ஏந்தி கோத்தபாய ராஜபக்சேவே வீட்டுக்கு போ என முழக்கமிட்டனர்.

தொடர் போராட்டம்

தொடர் போராட்டம்

இதேபோல் பல இடங்களில் பொதுமக்கள், ராஜபக்சேக்கு அரசுக்கு எதிராக தன்னெழுச்சியான போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இலங்கையில் மின்வெட்டும் அதிகரித்திருக்கிறது. அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமலும் மின்வெட்டு காரணமாகவும் பொதுமக்கள் வீதிக்கு வந்து போராடி வருகின்றனர். அத்துடன் சமூக வலைதளங்களில் GohomeGota என்ற ஹேஷ்டேக் மூலமும் ராஜபக்சேக்கள் அரசுக்கு எதிராக இலங்கை நாட்டு மக்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

இந்தியா உதவி

இந்தியா உதவி

இந்த நிலையில் இலங்கையை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்பதற்காக இந்தியா ரூ7,500 கோடி கடனுதவி வழங்கி உள்ளது. டெல்லியில் இது தொடர்பாக பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் ஆகியோரை இலங்கை நிதி அமைச்சர் பசில் ராஜபக்சே சந்தித்து பேசினார். இந்த பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து இலங்கைக்கு ரூ7500 கோடி கடனுதவி வழங்கும் ஒப்பந்தம் கையெழுத்தானது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+