இலங்கையில் இடைக்கால அமைச்சரவை பதவியேற்பு.. பொருளாதார நெருக்கடியை சமாளிக்க நடவடிக்கை! முழு தகவல்
கொழும்பு: இலங்கை நாட்டில் அரசியல் குழப்பம் உச்சத்தில் உள்ள நிலையில், புதிய இடைக்கால அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.
நமது அண்டை நாடான இலங்கையில் இப்போது மிக மோசமான பொருளாதார நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை கூட விண்ணை மூட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது.
கொரோனா காரணமாகப் பாதிக்கப்பட்ட இலங்கையின் பொருளாதாரம் இன்னும் மேம்படவில்லை. இதனால் இலங்கையில் உணவு பற்றாக்குறை எரிபொருள் தட்டுப்பாடு ஆகியவையும் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்

இலங்கை
அதேபோல பல்வேறு காரணங்களால் இலங்கை நாட்டின் அந்நிய செலாவணி மிக மோசமாக உள்ளது. இதனால் அங்கு அத்தியாவசிய பொருட்களைக் கூட இறக்குமதி செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. டீசல் ஏற்றுமதி குறைந்துள்ளதால் இலங்கையில் பல்வேறு பகுதிகளில் பல மணி நேரம் மின்வெட்டும் ஏற்பட்டுள்ளது. இதனால் கொந்தளிப்பில் உள்ள இலங்கை மக்கள் போராட்டத்தில் இறங்கி உள்ளனர்.

பெரிய குழப்பம்
இதனால் இலங்கையில் மிகப் பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், நேற்றிரவு இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச ராஜினாமா செய்ததாகத் தகவல் வெளியானது. இருப்பினும், இத்தகவலை இலங்கை அதிபர் அலுவலகம் உடனடியாக மறுத்தது. இதையடுத்து சற்று நேரத்திலேயே அந்நாட்டின் அனைத்து அமைச்சர்களும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். அதைத் தொடர்ந்து அதிபர் கோட்டாபய ராஜபக்சவை மகிந்த ராஜபக்ச சந்தித்தார்.

இடைக்கால அமைச்சரவை
மொத்தம் 26 அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ள நிலையில், அனைத்து அமைச்சர்களின் ராஜினாமாவையும் கோட்டாபய ராஜபக்ச ஏற்றுக்கொண்டார். மேலும், பொருளாதார நிதி நெருக்கடியைச் சமாளிக்கும் வகையில் அனைத்து கட்சிகளைக் கொண்ட அமைச்சரவையை அமைக்க அதிபர் கோட்டாபய ராஜபக்ச கோரிக்கை விடுத்தார். இந்தச் சூழலில் புதிய இடைக்கால அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.
Recommended Video

புதிய அமைச்சர்கள்
இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். புதிய அமைச்சரவையில் நிதி அமைச்சராக அலி சப்ரி, கல்வி அமைச்சராக தினேஷ் குணவர்த்தன பதவியேற்றுக் கொண்டனர். அதேபோல வெளியுறவுத் துறை அமைச்சராக ஜி.எல், பெய்ரிஸ், நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக பெர்னாண்டோ பதவி ஏற்றுக்கொண்டார்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications