இலங்கை குண்டுவெடிப்புக்கு 6 டன் வெடிமருந்து.. பின்னணியில் ஐஎஸ்ஐஎஸ்… அதிர்ச்சியூட்டும் தகவல்கள்
Recommended Video
கொழும்பு: இலங்கையில் 172 பேர் வரை பலியாக காரணமாக இருந்த தொடர் குண்டுவெடிப்பு பின்னணியில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கம் இருக்கலாம் என்று இலங்கை பாதுகாப்புத்துறை சந்தேகம் தெரிவித்துள்ளது.
ஈஸ்டர் திருநாள் என்பதால், இலங்கையில் வசிக்கும் கிறிஸ்தவ மக்கள் அனைவரும் தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டனர். தலைநகர் கொழும்புவில் கொச்சிக்கடை, நீர் கொழும்பு, கட்டுவப்பிட்டியா ஆகிய இடங்களில் உள்ள தேவாலயங்களில் அவர்கள் வழிபாடு நடத்தினர்.
அப்போது கொச்சிக்கடை தேவாலயத்தில் சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்தது. அதில் கட்டிட மேற்கூரை, தேவாலயத்தினுள் இருக்கும் மேசைகள் என அனைத்தும் சேதமடைந்தன. உள்ளே இருந்த நூற்றுக்கணக்கானோர் பீதியில் அலறினர்.

ரத்தம் வழிய அலறிய மக்கள்
பலர் ரத்தம் சொட்ட சொட்ட அச்சத்தில் தேவாலயத்தை விட்டு வெளியே ஓடினர். என்ன நடக்கிறது என்றே சில நிமிடங்களில் யாருக்கும் புரியவில்லை. அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

30 நிமிடத்தில் தாக்குதல்
இந்த சம்பவம் நிகழ்ந்த அடுத்த 30 நிமிடங்களில் நீர் கொழும்பு, கட்டுவபிட்டியா ஆகிய இடங்களில் உள்ள தேவாலயங்களிலும் வெடிகுண்டுகள் வெடித்தன. நடைபெற்றது. தலைநகர் கொழும்பில் உள்ள இரு தங்கும் விடுதிகளில் வெடிகுண்டு தாக்குதல் நடந்தது.

மட்டக்களப்பில் தாக்குதல்
தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான மட்டக்களப்பில் உள்ள அந்தோணியார் தேவாலயத்திலும் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. மொத்தமாக 6 இடங்களில் தாக்குதல் நடைபெற்றுள்ளது. தாக்குதல்களில் 172 பேர் உயிரிழந்துள்ளனர்.

பலி எண்ணிக்கை உயருகிறது
400க்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். எனவே பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப் படுகிறது.

ஐஎஸ்ஐஎஸ் பின்னணி?
இந்த கொடூர தாக்குதல்களில் 6 டன் வெடிமருந்து பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என இலங்கை பாதுகாப்புத்துறை சந்தேகம் தெரிவித்துள்ளது. தாக்குதலுக்கு இன்னும் எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இருந்த போதிலும் இந்த தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் இயக்கமாக இருக்கலாம் என்று இலங்கை சந்தேகம் தெரிவித்துள்ளது.

5 அடுக்கு பாதுகாப்பு
அதே நேரத்தில் ஓட்டல்களில் நடைபெற்றது தற்கொலைப்படை தாக்குதலாக கூட இருக்கலாம் என்ற சந்தேகம் உருவாகி உள்ளதாக இலங்கை பாதுகாப்புத் துறை கூறியிருக்கிறது. தொடர் குண்டுவெடிப்பால் நாடு முழுவதும் உள்ள தேவாலயங்களில் ஐந்தடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications