இலங்கையில் புதிய அமைச்சரவை பதவியேற்பு - மீன்வளத்துறை அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக, அங்குள்ள மக்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அதிபர் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.
கொழும்பு: இலங்கையில் 17 புதிய அமைச்சர்கள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர். இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு மீன்வளத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விமலவீர திசாநாயகவிற்கு வனத்துறையும், மோகன், பிரியதர்ஷன் டி சில்வாவிற்கு குடிநீர் வாரியம் ஆகிய துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அரசாங்கத்திற்கு எதிராக மக்களின் போராட்டம் தீவிரமாக உள்ளதையடுத்து, பிரதமர் மகிந்திர ராஜபக்சேவை தவிர்த்து, ஏனைய 26 அமைச்சர்கள் கடந்த 3ஆம் தேதி இரவு கூட்டாக அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்து விலகினர். எனினும் மறுநாள், நாடாளுமன்ற மற்றும் அரச விவகாரங்களை முன்நடத்தி செல்வதற்காக நிதியமைச்சர் உள்பட 4 அமைச்சர் பதவிகளுக்கு புதிய அமைச்சர்களை நியமித்து அதிபர் பதவிகளை வழங்கினார்.
இந்தநிலையில் கடந்த சில தினங்களாக முன்னாள் அமைச்சர்களுக்கும் அதே பிரச்சனைகளை தொடர்ச்சியாக சந்தித்து வந்தனர். இதன்போது புதிய அமைச்சரவை குறித்து ஆலோசனைபட்ட நிலையில், தனக்கு எவ்வித ஆட்சி பொறுப்புகளை வழங்கவேண்டாம் என ஆளுங்கட்சியின் உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

தொடர் போராட்டம்
மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தாலும், அவர்களின் கோரிக்கை என்பது அமைச்சர் ராஜபக்சே குடும்பங்கள் பதவி விலக வேண்டும் என்பதே. எனினும் இந்த போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து, தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இருப்பினும் சிலர் சுயநலமாகவும், சிலர் அமைச்சர் பதவிகளை வேண்டாம் என கூறி அதிபருக்கு வலியுறுத்தினர். மக்களின் போராட்டம் மற்றும் கோரிக்கையானது அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோர் அரசாங்கத்தை விட்டு வெளியேற வேண்டும் என்பதே ஆகும்.

கோத்தபய ராஜபக்ச முடிவு
இந்த நிலையில், அதிபர் பதவி முடியும் வரை பதவியில் இருப்பேன் என்று இலங்கை அதிபர் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் இலங்கை அதிபர் மாளிகையில் நடைபெற்ற கூட்டத்தின் முடிவில், புதிய அமைச்சரவை பொறுப்பேற்க திட்டமிடப்பட்டது. கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கையில் இன்று புதிய அமைச்சரவை பதவி ஏற்று உள்ளது.

17 பதவியேற்பு
இந்த அமைச்சரவையில் சுமார் 17 பேர் மட்டுமே புதிய அமைச்சர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர். அதிபர் கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் 17 பேரும் பதவியேற்றுக் கொண்டனர். இலங்கையில் 17 புதிய அமைச்சர்கள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர். இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு மீன்வளத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விமலவீர திசாநாயகவிற்கு வனத்துறையும், மோகன், பிரியதர்ஷன் டி சில்வாவிற்கு குடிநீர் வாரியம் ஆகிய துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மக்கள் ஆதரவு கிடைக்குமா
ராஜபக்சே குடும்பத்தினர் அரசியலை விட்டு வெளியேற வேண்டும் என்பதே மக்களின் ஒரே கோரிக்கையாக உள்ளது. இந்த நிலையில் புதிய அமைச்சரவைகளை மக்கள் ஏற்கமாட்டார்கள்; தொடர் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று சமூக ஆய்வாளர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications