Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இலங்கையில் புதிய அமைச்சரவை பதவியேற்பு - மீன்வளத்துறை அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக, அங்குள்ள மக்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அதிபர் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: இலங்கையில் 17 புதிய அமைச்சர்கள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர். இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு மீன்வளத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விமலவீர திசாநாயகவிற்கு வனத்துறையும், மோகன், பிரியதர்ஷன் டி சில்வாவிற்கு குடிநீர் வாரியம் ஆகிய துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அரசாங்கத்திற்கு எதிராக மக்களின் போராட்டம் தீவிரமாக உள்ளதையடுத்து, பிரதமர் மகிந்திர ராஜபக்சேவை தவிர்த்து, ஏனைய 26 அமைச்சர்கள் கடந்த 3ஆம் தேதி இரவு கூட்டாக அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்து விலகினர். எனினும் மறுநாள், நாடாளுமன்ற மற்றும் அரச விவகாரங்களை முன்நடத்தி செல்வதற்காக நிதியமைச்சர் உள்பட 4 அமைச்சர் பதவிகளுக்கு புதிய அமைச்சர்களை நியமித்து அதிபர் பதவிகளை வழங்கினார்.

இந்தநிலையில் கடந்த சில தினங்களாக முன்னாள் அமைச்சர்களுக்கும் அதே பிரச்சனைகளை தொடர்ச்சியாக சந்தித்து வந்தனர். இதன்போது புதிய அமைச்சரவை குறித்து ஆலோசனைபட்ட நிலையில், தனக்கு எவ்வித ஆட்சி பொறுப்புகளை வழங்கவேண்டாம் என ஆளுங்கட்சியின் உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

தொடர் போராட்டம்

தொடர் போராட்டம்

மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தாலும், அவர்களின் கோரிக்கை என்பது அமைச்சர் ராஜபக்சே குடும்பங்கள் பதவி விலக வேண்டும் என்பதே. எனினும் இந்த போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து, தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இருப்பினும் சிலர் சுயநலமாகவும், சிலர் அமைச்சர் பதவிகளை வேண்டாம் என கூறி அதிபருக்கு வலியுறுத்தினர். மக்களின் போராட்டம் மற்றும் கோரிக்கையானது அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோர் அரசாங்கத்தை விட்டு வெளியேற வேண்டும் என்பதே ஆகும்.

கோத்தபய ராஜபக்ச முடிவு

கோத்தபய ராஜபக்ச முடிவு

இந்த நிலையில், அதிபர் பதவி முடியும் வரை பதவியில் இருப்பேன் என்று இலங்கை அதிபர் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் இலங்கை அதிபர் மாளிகையில் நடைபெற்ற கூட்டத்தின் முடிவில், புதிய அமைச்சரவை பொறுப்பேற்க திட்டமிடப்பட்டது. கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கையில் இன்று புதிய அமைச்சரவை பதவி ஏற்று உள்ளது.

17 பதவியேற்பு

17 பதவியேற்பு

இந்த அமைச்சரவையில் சுமார் 17 பேர் மட்டுமே புதிய அமைச்சர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர். அதிபர் கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் 17 பேரும் பதவியேற்றுக் கொண்டனர். இலங்கையில் 17 புதிய அமைச்சர்கள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர். இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு மீன்வளத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விமலவீர திசாநாயகவிற்கு வனத்துறையும், மோகன், பிரியதர்ஷன் டி சில்வாவிற்கு குடிநீர் வாரியம் ஆகிய துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மக்கள் ஆதரவு கிடைக்குமா

மக்கள் ஆதரவு கிடைக்குமா

ராஜபக்சே குடும்பத்தினர் அரசியலை விட்டு வெளியேற வேண்டும் என்பதே மக்களின் ஒரே கோரிக்கையாக உள்ளது. இந்த நிலையில் புதிய அமைச்சரவைகளை மக்கள் ஏற்கமாட்டார்கள்; தொடர் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று சமூக ஆய்வாளர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+