சிறிசேனா திடீர் பல்டி.. நாடாளுமன்ற முடக்கத்தை நீக்கினார்.. 5ம் தேதி கூடுகிறது!
இலங்கையில் நாடாளுமன்ற முடக்கம் அந்நாட்டு அதிபர் சிறிசேனாவால் நீக்கப்பட்டுள்ளது.
கொழும்பு: இலங்கையில் நாடாளுமன்ற முடக்கம் அந்நாட்டு அதிபர் சிறிசேனாவால் நீக்கப்பட்டுள்ளது. வரும் நவம்பர் 5ம் தேதி நாடாளுமன்றம் கூட்டப்படும் என்று சிறிசேனா தெரிவித்துள்ளார்.
இலங்கையின் அதிபர் மைத்ரிபால சிறிசேனா, மகிந்த ராஜபக்சேவை பிரதமராக அறிவித்துள்ளார். ரணில் விக்ரம சிங்கே அங்கு பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
ஆனால் பாராளுமன்ற சபாநாயகர், தொடர்ந்து ரணில் விக்ரமசிங்கேதான் பிரதமராக இருப்பார் என்றுள்ளார். இந்த நிலையில் இரண்டு பேரும் தங்கள் பெரும்பான்மையை நாடாளுமன்றத்தில் நிரூபிக்க காத்திருக்கிறார்கள்.
[ரணில் மீண்டும் பிரதமரானால் அதிபராக இருக்க மாட்டேன்... சிறிசேனா தடாலடி! ]

என்ன செய்தனர்
இந்த நிலையில்தான் ரணில் விக்ரமசிங்கே தனது ஆதரவாளர்களின் ஆதரவு கடிதத்தை அந்நாட்டின் நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூர்யாவிடம் அளித்தார். அதை தொடர்ந்து 125 நாடாளுமன்ற எம்பிக்கள், சபாநாயகரிடம் உடனே நாடாளுமன்றத்தை கூட்டும்படி கோரிக்கை வைத்து கடிதம் அளித்தனர்.

சந்திப்பு நடத்தினார்கள்
இதையடுத்து நேற்று சபாநாயகர் கரு ஜெயசூர்யாவும் அதிபர் சிறிசேனாவும் சந்தித்துக் கொண்டனர். கரு ஜெயசூர்யா பழைய பிரதமர் ரணிலுக்கு ஆதரவாக உள்ளார். அதிபர் சிறிசேனா புதிய பிரதமர் ராஜபக்சேவிற்கு ஆதரவாக இருக்கிறார். இந்த நிலையில் இவர்கள் சந்தித்துக் கொண்டனர். இதில் சபாநாயகரின் வேண்டுகோளுக்கு இணங்க, நாடாளுமன்றத்தை கூட்ட அதிபர் ஒப்புக்கொண்டார்

கூடும்
இந்த நிலையில் இலங்கை நாடாளுமன்ற முடக்கம் நீக்கப்பட்டுள்ளது. நவம்பர் 5ம் தேதி நாடாளுமன்றம் கூட்டப்படும் என்று அதிபர் சிறிசேனா அறிவித்துள்ளார். நவம்பர் 16 வரை நாடாளுமன்றம் முடக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்ததை அதிபர் திரும்பப்பெற்றுள்ளார்.

பரபரப்பு
இலங்கையில் நவம்பர் 5ம் தேதி நாடாளுமன்றம் கூட்டப்படும். அன்றே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படவும் வாய்ப்பு உள்ளது. இதனால் அன்று உண்மையில் பிரதமர் யார், யாருக்கு பெரும்பான்மை உள்ளது என்று முடிவுகள் தெரியவரும். இதனால் வரும் திங்கள் கிழமை இலங்கை அரசியலில் மிக முக்கியமான நாளாக இருக்க போகிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications