மெல்ல மீண்ட இலங்கை.. கைகொடுத்த இந்தியா! பிரதமர் மோடியை சந்திக்க இந்தியா வருகிறார் ரணில் விக்ரமசிங்கே
கொழும்பு: பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்த இலங்கை தற்போது மெல்ல இயல்பு நிலையை நோக்கி நகர்ந்துக்கொண்டிருக்கும் நிலையில், இரண்டு நாள் பயணமாக அந்நாட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்க இரண்டு நாள் பயணமாக இந்தியா வருகை தருகிறார். அவர் பிரதமராக பதவியேற்ற பின்னர் இந்தியாவுக்கு வருவது இதுதான் முதல் முறையாகும்.
உலகம் முழுவதும் பொருளாதார மந்த நிலை கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. பணம் உள்ள நாடுகள் இந்த மந்த நிலையை சமாளித்துவிடுகிறது. ஆனால், பொருளாதார பலமற்ற நாடுகள் பெரும் இழப்புகளை சந்திக்கிறது. அப்படியாகதான் இலங்கையும் மாட்டிக்கொண்டது. அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்தது, ஏற்றுமதி குறைந்து இறக்குமதி அதிகமானது, தீவிரவாத தாக்குதல்கள், கொரோனா நெருக்கடி என மீளவே முடியாத சூழலில் இலங்கை சிக்கியது.

இது மக்கள் மத்தியில் பெரும் போராட்டங்களை தூண்டியது. போராட்டங்கள் கலவரங்களாக வெடித்தன. பெட்ரோல், அரிசி, கேஸ், காய்கறிகள், முட்டை, பால் என அத்தியாவசிய பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்தது. போதாக்குறைக்கு மின்வெட்டும் மக்களை வாட்டி வதைத்தது. இவை அனைத்தும்தான் மக்களின் போராட்டத்திற்கு முக்கிய காரணமாகும். ஒரு கட்டத்தில் அதிபர் மாளிகையையே போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர். இதனால் அதிபர் கோத்தபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகி நாட்டை விட்டு தப்பினர்.
இப்படியாக பல்வேறு மாற்றங்களுக்கு பின்னர் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்க தேர்ந்தெடுக்கப்பட்டு செயல்பட தொடங்கினார். தற்போது நாடு முழுவதும் இயல்பு நிலை மெல்ல திரும்பி வருகிறது. இதற்காக இந்தியா பேருதவிகளை செய்திருக்கிறது. இந்த உதவிக்கு ரணில் தொடர்ந்து நன்றி தெரிவித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் கொழும்பில் நடந்த இந்திய நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் கூட்டத்தில் இந்திய நாணயம் குறித்து அவர் பேசியிருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
அதாவது, இந்தியா வளர்ச்சிப் பாதையில் வேகமாக முன்னேறி வருவதாகவும், இது இந்திய பெருங்கடலில் உள்ள நாடுகளையும் சேர்த்து வளர்ச்சிப்பாதையில் அழைத்து செல்வதாகவும் கூறியிருந்தார். மேலும், அமெரிக்க டாலரை போல இந்தியாவின் ரூபாயயை பொது நாணயமாக பயன்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார். இது இந்தியாவின் அந்நிய செலாவணியை மேம்படுத்த உதவும். இதன் மூலம் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும்.
இந்நிலையில் இரண்டு நாட்கள் பயணமாக ரணில் விக்ரமசிங்க இந்தியா வருகிறார். நாளையும், நாளை மறுநாளும் இந்தியா வரும் அவர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்க இருக்கிறார்.
-
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா












Click it and Unblock the Notifications