கோத்தபாயவின் விலகல் கடிதத்துக்காக காத்திருக்கும் இலங்கை..ரணில் ராஜினாமாவை வலியுறுத்தும் தலைவர்கள்!
கொழும்பு: இலங்கையைவிட்டு தப்பி ஓடிவிட்ட கோத்தபாய ராஜபக்சே, ஜனாதிபதி பதவியில் இருந்து விலகும் கடிதத்தை அனுப்பி வைப்பார் என இலங்கை அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள் காத்திருக்கின்றனர். அதேநேரத்தில் கோத்தபாயவின் கடிதம் பெறுவதற்கு முன்னதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தமது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அனைத்து கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
Recommended Video
இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே நாட்டை விட்டு தப்பி ஓடிவிட்டார். கோத்தபாய மாலத்தீவுக்கு போய்விட்டதாக இலங்கை பிரதமர் அலுவலகம், விமானப் படை அலுவலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஏற்கனவே ஜூலை 13-ந் தேதி தாம் பதவி விலகுவதாக கோத்தபாய அறிவித்திருந்தார். இது தொடர்பான கடிதத்தில் அவர் கையெழுத்திட்டதாகவும் கூறப்பட்டது.

கோத்தபாய ராஜினாமா
ஆனால் ஜனாதிபதி பதவி விலகல் கடிதத்தை பகிரங்கப்படுத்திவிட்டு தப்பி ஓடினால், வெளிநாடுகள் அனுமதிக்காது; வெளிநாடுகளில் அகதியாக தஞ்சமடைய முடியாது என்பதால் இன்னமும் ராஜினாமா கடிதத்தை கோத்தபாய வெளியிடவில்லை; இக்கடிதம் சபாநாயகர் மஹிந்த யாப்பாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

தற்காலிக ஜனாதிபதி ரணில்
இதனிடையே தற்காலிக ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கே பொறுப்பேற்றதாக தமக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என சபாநாயகர் மஹிந்த யாப்பா கூறியிருந்தார். அதேநேரத்தில் பிரதமர் அலுவலகத்தைக் கைப்பற்றிய போராட்டக்காரர்கள், நாடாளுமன்றத்தை எந்த நிமிடத்திலும் கைப்பற்றக் கூடும் எனவும் கூறப்படுகிறது.

முப்படைகள் வேண்டுகோள்
இந்நிலையில் இலங்கை அனைத்து கட்சித் தலைவர்கள் கூட்டத்தை சபாநாயகர் மஹிந்த யாப்பா கூட்டினார். இக்கூட்டம் நடைபெறும் போது செய்தியாளர்களை சந்தித்த ராணுவ தளபதி சவேந்திர சில்வா, பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்; அனைத்து அரசியல் கட்சியினரும் இணைந்து அரசியல் தீர்வை எட்ட வேண்டும் எனக் கூறியிருந்தார்.

அனைத்துக் கட்சிக் கூட்டம்
இந்த சூழ்நிலையில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பேசுகையில், ரணில் விக்கிரமசிங்கே முதலில் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். கோத்தபாயவின் பதவி விலகல் அமலுக்கு வரும் முன்னர் ரணில் ராஜினாமா அவசியம். கோத்தபாய ராஜபக்சே தமது பதவியை ராஜினாமா செய்து கடிதம் அனுப்புவார் என எதிர்பார்க்கிறோம். அப்படி கோத்தபாய ராஜினாமா செய்யாவிட்டால் தாம் சபாநாயகர் பதவியை ராஜினமா செய்வேன் என மஹிந்த யாப்பா கூறியிருக்கிறார். மேலும் நாடாளுமன்றத்தைக் கைப்பற்றும் முயற்சிகளை கடுமையாக ஒடுக்கலாம் என்ற பாதுகாப்பு படையினரின் யோசனைக்கும் அனைத்து கட்சித் தலைவர்கள் அனுமதி மறுத்துள்ளனர் என்கின்றன கொழும்பு தகவல்கள்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications