கோத்தபாயவின் விலகல் கடிதத்துக்காக காத்திருக்கும் இலங்கை..ரணில் ராஜினாமாவை வலியுறுத்தும் தலைவர்கள்!
கொழும்பு: இலங்கையைவிட்டு தப்பி ஓடிவிட்ட கோத்தபாய ராஜபக்சே, ஜனாதிபதி பதவியில் இருந்து விலகும் கடிதத்தை அனுப்பி வைப்பார் என இலங்கை அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள் காத்திருக்கின்றனர். அதேநேரத்தில் கோத்தபாயவின் கடிதம் பெறுவதற்கு முன்னதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தமது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அனைத்து கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
Recommended Video
இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே நாட்டை விட்டு தப்பி ஓடிவிட்டார். கோத்தபாய மாலத்தீவுக்கு போய்விட்டதாக இலங்கை பிரதமர் அலுவலகம், விமானப் படை அலுவலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஏற்கனவே ஜூலை 13-ந் தேதி தாம் பதவி விலகுவதாக கோத்தபாய அறிவித்திருந்தார். இது தொடர்பான கடிதத்தில் அவர் கையெழுத்திட்டதாகவும் கூறப்பட்டது.

கோத்தபாய ராஜினாமா
ஆனால் ஜனாதிபதி பதவி விலகல் கடிதத்தை பகிரங்கப்படுத்திவிட்டு தப்பி ஓடினால், வெளிநாடுகள் அனுமதிக்காது; வெளிநாடுகளில் அகதியாக தஞ்சமடைய முடியாது என்பதால் இன்னமும் ராஜினாமா கடிதத்தை கோத்தபாய வெளியிடவில்லை; இக்கடிதம் சபாநாயகர் மஹிந்த யாப்பாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

தற்காலிக ஜனாதிபதி ரணில்
இதனிடையே தற்காலிக ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கே பொறுப்பேற்றதாக தமக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என சபாநாயகர் மஹிந்த யாப்பா கூறியிருந்தார். அதேநேரத்தில் பிரதமர் அலுவலகத்தைக் கைப்பற்றிய போராட்டக்காரர்கள், நாடாளுமன்றத்தை எந்த நிமிடத்திலும் கைப்பற்றக் கூடும் எனவும் கூறப்படுகிறது.

முப்படைகள் வேண்டுகோள்
இந்நிலையில் இலங்கை அனைத்து கட்சித் தலைவர்கள் கூட்டத்தை சபாநாயகர் மஹிந்த யாப்பா கூட்டினார். இக்கூட்டம் நடைபெறும் போது செய்தியாளர்களை சந்தித்த ராணுவ தளபதி சவேந்திர சில்வா, பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்; அனைத்து அரசியல் கட்சியினரும் இணைந்து அரசியல் தீர்வை எட்ட வேண்டும் எனக் கூறியிருந்தார்.

அனைத்துக் கட்சிக் கூட்டம்
இந்த சூழ்நிலையில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பேசுகையில், ரணில் விக்கிரமசிங்கே முதலில் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். கோத்தபாயவின் பதவி விலகல் அமலுக்கு வரும் முன்னர் ரணில் ராஜினாமா அவசியம். கோத்தபாய ராஜபக்சே தமது பதவியை ராஜினாமா செய்து கடிதம் அனுப்புவார் என எதிர்பார்க்கிறோம். அப்படி கோத்தபாய ராஜினாமா செய்யாவிட்டால் தாம் சபாநாயகர் பதவியை ராஜினமா செய்வேன் என மஹிந்த யாப்பா கூறியிருக்கிறார். மேலும் நாடாளுமன்றத்தைக் கைப்பற்றும் முயற்சிகளை கடுமையாக ஒடுக்கலாம் என்ற பாதுகாப்பு படையினரின் யோசனைக்கும் அனைத்து கட்சித் தலைவர்கள் அனுமதி மறுத்துள்ளனர் என்கின்றன கொழும்பு தகவல்கள்.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications