புலிகள் இயக்கத்தை இந்தியா மீண்டும் உருவாக்குகிறதா? டெல்லி 'லிங்க்' அரசியல்வாதிகளிடம் இலங்கை விசாரணை
கொழும்பு: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் உருவாக்க இந்தியா உதவுகிறதா? இந்தியா பணம், ஆயுதங்கள் வழங்க திட்டமிட்டுள்ளதா? என்பது தொடர்பாக டெல்லி வந்து சென்ற ஜனநாயகப் போராளிகள் கட்சி நடத்துகிற முன்னாள் விடுதலைப் புலிகளிடம் யாழ்ப்பாணத்தில் இலங்கை அரசாங்கம் விசாரணை நடத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
யாழ்ப்பாணத்தில் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் செயலாளர் கதிர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கொழும்பு பயங்கரவாத தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கடந்த 11-ந் தேதி என்னிடம் விசாரணை நடத்தினர். கொழும்பில் விசாரணைக்கு ஆஜராகவும் சம்மன் வழங்கினர். பின்னர் கடந்த 15-ந் தேதி சுமார் 5 மணிநேரம் என்னிடம் தொடர் விசாரணை நடத்தினர்.

என்னிடம் நடத்தப்பட்ட விசாரணைகள் அனைத்தும் இந்தியாவை மையப்படுத்தியதாக, தொடர்புபடுத்தியதாக இருந்தது. கடந்த ஆண்டு டெல்லியில் நடைபெற்ற இலங்கை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஒன்றில் பங்கேற்றதன் அடிப்படையில் இந்த விசாரணை, கேள்விகள் என்னிடம் கேட்கப்பட்டன.
இலங்கையில் என்ன அரசியல் செய்ய வேண்டும் என இந்தியா கட்டளையிட்டுள்ளது? இதற்காக இந்தியா வழங்கிய நிதி உதவி எவ்வளவு? முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் போன்ற நிகழ்ச்சிகளை நடத்த எப்படி பணம் கிடைக்கிறது? இந்தியா இதற்கு பணம் தருகிறதா?
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் உருவாக்குவதற்கு இந்தியா திட்டம் தீட்டியுள்ளதா? அப்படி விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் உருவாக்கம் செய்ய இந்தியா ஆயுதங்கள், பணம் கொடுக்க திட்டமிட்டுள்ளதா? என்கிற கேள்விகள் என்னிடம் கேட்கப்பட்டன. இவ்வாறு கதிர் கூறினார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழீழ் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்ததாக, மூத்த தமிழ் தேசிய அரசியல் தலைவர் பழ. நெடுமாறன் அறிவித்திருந்தார். அவரது இந்த அறிவிப்பை பல்வேறு தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களும் ஏற்கவில்லை. அப்போது, இந்திய உளவுத்துறையானது விடுதலைப் புலிகளை மீண்டும் உருவாக்க பழ.நெடுமாறன் மூலம் முயற்சிக்கிறது என விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
வங்கியில் நடக்கும் "சில" விஷயங்கள்.! HDFC வங்கி தலைவர் திடீர் ராஜினாமா! லெட்டரில் சொன்ன பரபர மேட்டர் -
சீனா வேண்டாம்.. நடுக்கடலில் இந்தியாவை நோக்கி திரும்பிய 7 ரஷ்யா ஆயில் கப்பல்கள்! என்ன நடந்தது? -
ரஷ்யாவின் அதிரடி முடிவு.. திகைப்பில் நின்ற சீனா! கத்தார் போருக்கு நடுவே இந்தியாவுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி -
இந்திய கப்பல்களில் வந்த 92,700 மெட்ரிக் டன் எல்பிஜி! ஆனால் இது பத்தாது! ப.சிதம்பரம் சொன்ன பாயிண்ட் -
"இந்தியாவுக்கே ஆபத்து.." தீவிரவாத கும்பலுடன் இருந்த அமெரிக்கரை சைலண்டாக தூக்கிய என்ஐஏ.. யார் இவர்? -
கேஸ் சிலிண்டர் பிரச்சனைக்கு என்ன தான் தீர்வு? திடீரென பறந்த லெட்டர்.. மத்திய அரசு முக்கிய பாயிண்டு -
இந்திய கப்பல்களுக்கு மட்டும் வழிவிடும் ஈரான்.. தமிழகத்திற்கு கிடைத்த மெகா நல்ல செய்தி.. சூப்பர்ல -
ஈரானுக்கு அள்ளிக்கொடுக்கும் இந்தியா.. போருக்கு நடுவே மருத்துவ உதவிகள்.. நீங்களும் நன்கொடை கொடுக்கலாம் -
"இந்தியர்களே வெளியேறுங்கள்!" இலவச விமான டிக்கெட் + ரூ.2.40 லட்சம் தரோம்! டிரம்ப்பின் சர்ச்சை திட்டம் -
இந்தியா உட்பட.. உலகம் முழுவதும் x தளம் முடங்கியது! கோடிக்கணக்கான பயனர்கள் தவிப்பு! -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு












Click it and Unblock the Notifications