Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வெளிநாட்டவரை திருமணம் செய்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் சான்றிதழ் கட்டாயம்- இலங்கை அரசு அதிரடி

Subscribe to Oneindia Tamil

தேவை என இலங்கை அரசு அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

இலங்கையில் 2019-ம் ஆண்டு ஏப்ரல் 21-ல் ஈஸ்டர் தினத்தில் தேவாலயங்கள், நட்சத்திர ஹோட்டல்கள் மீது தற்கொலைப் படை தாக்குதல்கள் நடத்தப்பட்டன. 8 தற்கொலைப் படை தீவிரவாதிகள் நடத்திய இத்தாக்குதல்களில் மொத்தம் 277 பேர் பலியாகினர்.

Srilanka imposes Defence Ministry Clearance for Marriage

ஈஸ்டர் தின தாக்குதல்கள் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளில் திருமணம் மூலம் இலங்கையில் பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பது தெரியவந்தது. அதாவது பயங்கரவாதிகள், போதைப் பொருட்கள் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள், கறுப்பு பணம் பதுக்கலில் தொடர்புடையவர்கள் இலங்கை பெண்களை திருமணம் செய்து கொள்வதில் ஆர்வம் காட்டுவது இந்த விசாரணைகளில் தெரியவந்தது.

இதனையடுத்து இலங்கை அரசு தற்போதைய திருமண நடைமுறைகளில் மாற்றம் கொண்டுவர முடிவு செய்தது. இலங்கையைப் பொறுத்தவரையில் வெளிநாட்டவரை திருமணம் செய்ய பாஸ்போர்ட், இருப்பிட சான்றிதழ், பிறப்பு சான்றிதழ் ஆகிய மூன்று மட்டும் போதுமானதாக இருந்தது.

தற்போது வெளிநாட்டவரை திருமணம் செய்வதற்கு பாதுகாப்பு அமைச்சகத்தின் தடை நீக்கல் சான்றிதழை கட்டாயமாகப் பெற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை 2022-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது. அத்துடன் வெளிநாட்டவரை திருமணம் செய்யும் போது அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டவரா? தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளாரா? நீண்டகால நோய்கள் எதுவும் இருக்கிறதா? என்பது குறித்த அறிக்கையையும் கொடுக்க வேண்டும் என்றும் இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த புதிய சட்டத்துக்கு இலங்கையில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+