இலங்கை ஈஸ்டர் தின தாக்குதல்: மாஜி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் விசாரணை
கொழும்பு: இலங்கையை உலுக்கிய ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் அந்த நாட்டு ஜனாதிபதி ஆணைக் குழுவின் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இலங்கையில் கடந்த ஆண்டு ஈஸ்டர் தினமான ஏப்ரல் 21-ந் தேதி தேவாலயங்கள் உள்ளிட்ட பல இடங்களில் வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதில் 200க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். உலகையே அதிர வைத்தது இந்த ஈஸ்டர் தின தாக்குதல்கள்.

ஈஸ்டர் தின தாக்குதல்களுக்கு சர்வதேச பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ். பொறுப்பேற்றது. ஆனால் இந்த ஈஸ்டர் தின தாக்குதல்கள் இலங்கை அரசியலில் பெரும் புயலை கிளப்பியது. அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன- பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே அரசுக்கு பெரும் பின்னடைவாக கருதப்பட்டது. அதேநேரத்தில் மகிந்த ராஜபக்சே சகோதரர்களால்தான் இலங்கையை பாதுகாக்க முடியும் என்கிற கருத்தும் ஆழமாக விதைக்கப்பட்டது.
மேலும் ஈஸ்டர் தின தாக்குதல்கள் தொடர்பாக இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் இலங்கை உளவு அமைப்பும் முன்னரே எச்சரித்திருந்தன; ஆனால் ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேன இந்த எச்சரிக்கையை புறக்கணித்துவிட்டார் என்கிற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது. இதனை மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாக மறுத்து வந்தார். இது தொடர்பாக மைத்திரிபால சிறிசேனவிடம் விசாரணை நடத்த ஜனாதிபதி ஆணைக்குழு முடிவு செய்தது.
இதனால் விசாரணை ஆணையத்தின் முன் ஆஜராகவேண்டும் என்று மைத்திரிபால சிறிசேனவுக்கு சம்மனும் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் தம்மால் விசாரணைக் குழு முன்பாக ஆஜராக முடியாது என மைத்திரிபால சிறிசேன பிடிவாதம் பிடித்தார். இந்த நிலையில்தான் இன்று மைத்திரிபால சிறிசேனவின் வீட்டுக்கு சென்று ஜனாதிபதி ஆணைக்குழுவின் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
-
ஈரோட்டில் ஆசை ஆசையாய் அப்பாவின் சொத்தை மாற்ற போன தினேஷ்.. அரசு ஊழியருக்கு ட்விஸ்ட் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? மானியம் வங்கி கணக்கிற்கு வராமல் போவது ஏன்? சமையலறையில் டிஜிட்டல் மர்மம் -
"அப்படியே ஓடிடுங்க.." தங்கம் அவுட், கேஷ் இன்.! ஆனந்த் சீனிவாசன் சொன்ன மேட்டர் இதுதான் -
சவுதிக்கு விழுந்த அடி! ஹார்முஸ் ஜலசந்திக்கு பதில் செங்கடல்.. அடிமடியில் கைவைத்த ஈரானால் ரூட் மாற்றம் -
தேனியில் ஓ பன்னீர்செல்வம் நினைத்தே பார்க்காதது.. கூண்டோடு விலகிய ஆதரவாளர்கள் எடுத்த முடிவு -
மீடியாவில் பேசாதீங்க.. தடுக்கப்படும் சங்கீதா.. விஜய் தரப்பில் 'மூவ்'? கோடிகளில் எகிறும் சமாதான தூது? -
இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் செய்ய தயார்.. போர் பதற்றத்துக்கு மத்தியில் ரஷ்யா அறிவிப்பு! -
உறுதியான காங்கிரஸ் திமுக கூட்டணி! அறிவாலய அலார்ம்! சத்தியமூர்த்தி பவன் சரண்டர்! அதிகாலை முடிந்த டீல் -
பிரபல ஐடி நிறுவனத்தில் வேலை செய்யாத மேனேஜர்களுக்கு கோடிகளில் போனஸ்.. 173 கோடி சம்பளம் வாங்கும் சிஇஓ -
ஈரானை தாக்க.. இந்திய துறைமுகத்தை பயன்படுத்தியதா அமெரிக்கா? மத்திய அரசு மறுப்பு -
5 ஸ்டார் ஹோட்டல் மாதிரி சில்லென்ற சொகுசு: சென்னை டூ நெல்லை ரயில் பயணிகளுக்கு ரூ.25ல் பெரிய சர்ப்ரைஸ் -
அபிஷேக் சர்மா அவுட்.. ரிங்கு சிங் இன்.. அரையிறுதியில் மொத்தமாக மாறப்போகும் இந்திய பிளேயிங் லெவன்?












Click it and Unblock the Notifications