கோத்தபாய ராஜபக்சே உயிருக்கு ஆபத்து? ஜனாதிபதி மாளிகையில் இருந்து வெளியேற்றப்பட்டதாக பரபரப்பு
கொழும்பு: இலங்கை தலைநகரில் தொடர்ந்து அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தி வருபவர்களால் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சேவின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து ஜனாதிபதி மாளிகையில் இருந்து அவர் அவசரமாக வெளியேற்றப்பட்டதாக சிங்கள ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
இலங்கையில் ஒவ்வொரு மாதம் 9-ந் தேதியும் ஏதேனும் ஒரு முக்கிய அரசியல் நிகழ்வு நடைபெற்று வருகிறது. ராஜபக்சே சகோதரர்களுக்கு எதிரான போராட்டங்கள் மார்ச் 9-ந் தேதி தொடங்கியது. அப்போது முதல் இலங்கையில் ஒவ்வொரு மாதமும் 9-ந் தேதி ஏதேனும் அரசியல் விபரீதம் நிகழ்கிறது. மகிந்த ராஜபக்சே பதவி விலகியதும் உயிருக்கு அஞ்சிய ஓடியதும் 9-ந் தேதிதான் நிகழ்ந்தது.

இந்நிலையில் நாளை 9-ந் தேதி ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சேவின் அதிபர் மாளிகை முற்றுகையிட்டு உக்கிரப் போராட்டம் நடத்தப்படும் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த நிலையில் நாளைய போராட்டத்தால் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சேவின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என உளவுத்துறை தகவல்கள் தெரிவித்தன; இதனடிப்படையில் கோத்தபாய ராஜபக்சே, ஜனாதிபதி மாளிகையில் இருந்து பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற்றப்பட்டார் என்கின்றன சிங்கள இணையதளங்கள்.
இதனிடையே கொழும்பில் இதுவரை இல்லாத வகையில் மிகப் பெரிய அளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இலங்கை தலைநகர் கொழும்பில் 5,000க்கும் அதிகமான ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே காலிமுகத்திடலில் போராட்டம் நடத்தும் 'கோட்டா கோகம' குழுவினருடன் இணைந்து அனைத்து எதிர்க்கட்சி அரசியல் கட்சிகளும் தங்கள் குழுக்களை எந்த வன்முறை நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டாம் என்று கடுமையாக அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications