இலங்கையில் ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிப்போம்: தேர்தல் பிரசாரத்தில் சஜித் பிரேமதாச பரபர வாக்குறுதி
கொழும்பு: இலங்கை ஜனாதிபதி தேர்தலில் தாம் வெற்றி பெற்றால் ஜனாதிபதிக்கு அதிகாரங்கள் வழங்குகிற நடைமுறையில் உள்ள ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிப்பேன்; நாடாளுமன்றத்துக்கு அதிக அதிகாரம் வழங்கக் கூடிய ஆட்சி முறையை கொண்டுவருவேன் என எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாச வாக்குறுதி அளித்துள்ளார். இலங்கை ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளராக சஜித் பிரேமதாச களம் காண்கிறார்.
இலங்கையில் அடுத்த மாதம் 21-ந் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இடதுசாரித் தலைவர் அனுர குமார திசநாயக்க, மகிந்த ராஜபக்சே மூத்த மகன் நாமல் ராஜபக்சே, 7 தமிழ்க் கட்சிகளின் பொதுவேட்பாளர் அரியநேந்திரன், இந்திய வம்சாவளித் தமிழர் திலகராஜ் உள்ளிட்டோர் கலம் காண்கின்றனர். இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட்டு தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இலங்கையின் ருவன்வெல்ல என்ற இடத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தாம் இலங்கையின் ஜனாதிபதியாக பதவியேற்றால் ஜனாதிபதிக்கு அதிக அதிகாரம் தரக் கூடிய ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழித்துக் கட்டுவேன். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிக்களுக்கு- நாடாளுமன்றத்துக்குதான் அதிக அதிகாரம் தரப்பட வேண்டும். அதற்கான சட்டங்களை நடைமுறைப்படுத்துவோம் என்றார்.
இலங்கை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் மகிந்த ராஜபக்சேவின் மகன் நாமல் ராஜபக்சே நாளை மறுநாள் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்க உள்ளார். ரணில் விக்கிரமசிங்கேவுக்கு ஆதரவாக டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட தமிழ்க் கட்சித் தலைவர்கள் சிலர் பிரசாரம் செய்து வருகின்றனர். ரணில் விக்கிரமசிங்கேவை ஆதரித்து அனுராதபுரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இலங்கைக்கு இனிதான் நல்ல காலம் பிறக்க இருக்கிறது. நாட்டை பொருளாதாரப் பேரழிவில் இருந்து மீட்டு எழுச்சிக்கு வழிவகுத்தவர் ரணில் விக்கிரமசிங்கே. ஆகையால்தான் ரணில் விக்கிரமசிங்கேவுடன் இணைந்து பயணிக்கிறோம் என்றார்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications