இறுதிப்போர் நடந்த முல்லைத் தீவில் கோத்தபய பெரும் பின்னடைவு.. சஜித்திற்கு அசரவைக்கும் ஆதரவு!
இலங்கையில் உள்நாட்டு போரில் இறுதிப்போர் நடந்த முல்லைத் தீவில் கோத்தபய ராஜபக்சே பெரும் பின்னடைவை சந்தித்துள்ளார்.
கொழும்பு: இலங்கையில் உள்நாட்டு போரில் இறுதிப்போர் நடந்த முல்லைத் தீவில் கோத்தபய ராஜபக்சே பெரும் பின்னடைவை சந்தித்துள்ளார்.
இலங்கை அதிபர் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே 50% வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார். 4,42,185 வாக்குகள் வித்தியாசத்தில் கோத்தபய ராஜபக்சே முன்னிலை பெற்றுள்ளார். இதனால் கோத்தபய ராஜபக்சே அதிபர் ஆக வெற்றிபெறுவது உறுதியாகி உள்ளது.
கோத்தபய ராஜபக்சே 35,40,023 வாக்குகளும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 30,97,838 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

ஆனால் என்ன
ஆனால் இலங்கையில் உள்நாட்டு போரில் இறுதிப்போர் நடந்த முல்லைத் தீவில் கோத்தபய ராஜபக்சே பெரும் பின்னடைவை சந்தித்துள்ளார். வன்னி - முல்லைத் தீவு பகுதியில் சஜித் பிரேமதாச - 47,594 (86.19%) வாக்குகளை பெற்றுள்ளார். கோத்தபய ராஜபக்சே- 4,252 (7.70%) வாக்குகளை பெற்றுள்ளார்.

கிளிநொச்சி எப்படி
கிளிநொச்சி மாவட்டத்தில் சஜித் பிரேமதாச - 55,585 வாக்குகளை பெற்றுள்ளார். கோத்தபய ராஜபக்சே - 3,238 வாக்குகளை பெற்றுள்ளார். இது கோத்தபய ராஜபக்சே தரப்பை பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

முல்லைத் தீவு எங்கு
முல்லைத் தீவு பகுதியில்தான் இலங்கையில் இறுதிப்போர் நடந்தது. அங்கு போர் அத்துமீறல்கள், குற்றங்கள் அதிகம் நடந்தது. பல தமிழர்கள் இதனால் உறவுகளை, உடமைகளை, வீடுகளை இழந்தனர். பல லட்சம் மக்கள் அகதிகளாக வேறு நாடுகளுக்கு குடியேறினார்கள்.

போர் நடந்தது
தற்போது அதே முல்லை தீவில் மகிந்த ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபய ராஜபக்சே மிக மோசமாக வாக்குகளை பெற்றுள்ளார். இலங்கையின் தென் பகுதியில் மக்கள் ஆதரவை பெற்றாலும் கூட, வடக்கு மாகாணங்களில் யாரும் எதிர்பாக்காத அளவுக்கு பின்னடைவை சந்தித்துள்ளார்.

தமிழர்கள் ஆதரவு
அவர் வடக்கு மாகாணத்தில் எந்த மாவட்டத்திலும் 10%க்கும் அதிகமாக வாக்குகளை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் சஜித் பிரேமதாச பல வடக்கு மாவட்டங்களில் 80-90% வாக்குகளை பெற்று இருக்கிறார். மொத்தத்தில் தமிழர்கள் இன்னும் கோத்தபய ராஜபக்சேவை ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications