தேர்தலில் தோல்வியை ஒப்புக்கொள்கிறேன்.. கோத்தபய ராஜபக்சேவிற்கு வாழ்த்துகள்.. சஜித் பரபர பேட்டி!
இலங்கை அதிபர் தேர்தலில் தோல்வியை ஒப்புக்கொள்கிறேன், அதிபராக வெற்றிபெற்றுள்ள கோத்தபய ராஜபக்சேவிற்கு வாழ்த்துகள் என்று சஜித் பிரேமதாச பேட்டி அளித்துள்ளார்.
கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் தோல்வியை ஒப்புக்கொள்கிறேன், அதிபராக வெற்றிபெற்றுள்ள கோத்தபய ராஜபக்சேவை பாராட்டுகிறேன் என்று ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச பேட்டி அளித்துள்ளார்.
இலங்கை அதிபர் தேர்தலுக்கான முன்னணி நிலவரங்கள் தற்போது வெளிவர தொடங்கி உள்ளது. முழுமையான முடிவுகள் நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையின் தற்போதைய அதிபர் மைத்திரிபால சிறிசேனாவின் பதவிக் காலம் முடிந்ததால் அங்கு தேர்தல் நடந்துள்ளது. இதனால் இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்கு பதிவு முடிந்து நேற்று இரவில் இருந்து வாக்கு எண்ணும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

கடும்
இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். காலையில் இருந்து 1 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை அவர் பெற்றுள்ளார். இவருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கும் போட்டி நிலவி வருகிறது.

பாதி
தற்போது கோத்தபய ராஜபக்சே 50% வாக்குகளை பெற்று முன்னிலையில் இருக்கிறார். இதனால் ஏறத்தாழ கோத்தபய ராஜபக்சவின் வெற்றி உறுதியாகிவிட்டது. கோத்தபய ராஜபக்சேவின் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தொண்டர்கள் இப்போதே கொண்டாட்டத்தில் ஈடுபாடு வருகிறார்கள்.

பேட்டி அளித்தார்
இந்த நிலையில் ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச பேட்டி அளித்துள்ளார். அதில் மக்களின் முடிவிற்கு தலை வணங்குகிறேன். அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகள். இலங்கை அதிபர் தேர்தலில் தோல்வியை ஒப்புக்கொள்கிறேன்.

வாழ்த்து
அதிபராக வெற்றிபெற்றுள்ள கோத்தபய ராஜபக்சேவை பாராட்டுகிறேன். தேர்தலில் எனக்கு வாக்களித்த மக்களுக்கும், தேர்தல் பணிகளை செய்த தொண்டர்களுக்கும் என்னுடைய நன்றி என்று ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச பேட்டி அளித்துள்ளார்.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications