இலங்கை சட்டம் ஒழுங்கை பாதுகாக்க மக்கள் ஒத்துழைப்பு,அரசியல் தீர்வு அவசியம்- முப்படை தளபதிகள் அப்பீல்
கொழும்பு: இலங்கையில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் நாட்டின் குழப்பநிலைகளுக்கு அரசியல் தீர்வுகளுக்கு விரைவாக தீர்வு காண வேண்டும் என்றும் இலங்கையின் முப்படை தளபதிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Recommended Video
இலங்கையின் அரசியலில் இதுவரை இல்லாத வகையில் இலங்கையின் முப்படை தளபதிகள், போலீஸ் அதிகாரிகள் இன்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
இச்சந்திப்பின் போது ராணுவ தளபதி சவேந்திர சில்வா கூறியதாவது: பொதுமக்கள், இளைஞர்கள் தற்போதைய நிலைமையை இயல்பு நிலைக்கு கொண்டு வரும் வரை அமைதி காக்க வேண்டும். நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதற்கு முப்படையினருக்கும் போலீசாருக்கும் அனைத்து தரப்பும் ஆதரவு வழங்க வேண்டும். தனிநபர், பொதுச்சொத்துகளை சேதம் விளைவிக்க வேண்டாம். நாட்டின் சொத்துகளைப் பாதுகாக்க எங்களை கடமையாற்ற விட வேண்டும்.

நாட்டின் புதிய ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்படும் வரை அமைதியை நிலைநாட்ட முப்படையினரும் போலீசாரும் தயார் நிலையில்தான் உள்ளனர். சபாநாயகர் தலைமையிலான அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது. அதில் அரசியல் முடிவு எடுக்கப்பட உள்ளது. ஆகையால் பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும் என்றனர்.
இதனிடையே இலங்கை பொதுஜன பெரமுன வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் அமைதியை நிலைநாட்ட முழு ஆதரவை வழங்க தயாராக உள்ளோம். நாடு தற்போது எதிர்நோக்கும் வன்முறைக் குழுக்களின் நடத்தைகள் தீவிரமாகக் கவனிக்கப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அதேபோல்பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்தால் தொடர்ந்தும் மக்கள் போராட்டங்களுக்கு ஆதரவு வழங்க முடியாது என வழக்கறிஞர்கள் சங்கம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications