இலங்கை சட்டம் ஒழுங்கை பாதுகாக்க மக்கள் ஒத்துழைப்பு,அரசியல் தீர்வு அவசியம்- முப்படை தளபதிகள் அப்பீல்
கொழும்பு: இலங்கையில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் நாட்டின் குழப்பநிலைகளுக்கு அரசியல் தீர்வுகளுக்கு விரைவாக தீர்வு காண வேண்டும் என்றும் இலங்கையின் முப்படை தளபதிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Recommended Video
இலங்கையின் அரசியலில் இதுவரை இல்லாத வகையில் இலங்கையின் முப்படை தளபதிகள், போலீஸ் அதிகாரிகள் இன்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
இச்சந்திப்பின் போது ராணுவ தளபதி சவேந்திர சில்வா கூறியதாவது: பொதுமக்கள், இளைஞர்கள் தற்போதைய நிலைமையை இயல்பு நிலைக்கு கொண்டு வரும் வரை அமைதி காக்க வேண்டும். நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதற்கு முப்படையினருக்கும் போலீசாருக்கும் அனைத்து தரப்பும் ஆதரவு வழங்க வேண்டும். தனிநபர், பொதுச்சொத்துகளை சேதம் விளைவிக்க வேண்டாம். நாட்டின் சொத்துகளைப் பாதுகாக்க எங்களை கடமையாற்ற விட வேண்டும்.

நாட்டின் புதிய ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்படும் வரை அமைதியை நிலைநாட்ட முப்படையினரும் போலீசாரும் தயார் நிலையில்தான் உள்ளனர். சபாநாயகர் தலைமையிலான அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது. அதில் அரசியல் முடிவு எடுக்கப்பட உள்ளது. ஆகையால் பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும் என்றனர்.
இதனிடையே இலங்கை பொதுஜன பெரமுன வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் அமைதியை நிலைநாட்ட முழு ஆதரவை வழங்க தயாராக உள்ளோம். நாடு தற்போது எதிர்நோக்கும் வன்முறைக் குழுக்களின் நடத்தைகள் தீவிரமாகக் கவனிக்கப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அதேபோல்பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்தால் தொடர்ந்தும் மக்கள் போராட்டங்களுக்கு ஆதரவு வழங்க முடியாது என வழக்கறிஞர்கள் சங்கம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications