இலங்கையில் ஜூன் 20-ந் தேதி நாடாளுமன்றத் தேர்தல்- அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: இலங்கையில் ஜூன் 20-ந் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக நாடுகளில் மனிதப் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது கொரோனா தொற்று நோய். இதனால் இலங்கையில் ஏப்ரல் 25-ந் தேதி நடைபெற இருந்த நாடாளுமன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

Srilanka to hold Parliament Election on June 20

அதேநேரத்தில் இலங்கையிலும் கொரோனாவின் தாக்கம் இருந்து வந்தது. இதனால் ஊரடங்கு உள்ளிட்டவை முழுமையாக அமல்படுத்தப்பட்டிருந்தன. இலங்கையில் கொரோனாவால் 304 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 7 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே கொரோனாவின் தாக்கம் குறைந்ததால் இலங்கையில் ஊரடங்கு தளர்த்தப்பட்டன. இதனையடுத்து இலங்கையில் ஜூன் 20-ந் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படும் என்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேர்தல் ஆணைக் குழு வெளியிட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+