இலங்கையில் இனி கூப்பன் கொடுத்தால்தான் பெட்ரோல், டீசல் கிடைக்கும்... அலாரம் அடிக்கும் பிரதமர் ரணில்
கொழும்பு: இலங்கையில் பெட்ரோல், டீசலுக்கான தட்டுப்பாடு மேலும் 3 வார காலத்துக்கு நீடிக்கும் என்றும் பெட்ரோல், டீசல் பெறுவதற்கு கூப்பன் முறையை அமல்படுத்துவதை தவிர்க்கவும் முடியாது என்றும் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்தார்.
இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று ரணில் விக்கிரமசிங்கே பேசியதாவது: நமது முதன்மையான கவனம் நாட்டின் பொருளாதார நிலைத்தன்மையில் உள்ளது. ஆனால், பொருளாதார நிலைமைத் தன்மையை ஏற்படுத்துவதன் மூலம் மட்டும் நாம் இந்நிலையிலிருந்து மீள முடியாது. நம் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டும். இது இரண்டு, மூன்று நாட்களில் செய்து முடிக்கும் காரியமல்ல. இந்த சவாலை அற்புதங்களால் செய்துவிட முடியாது. வெற்று முழக்கங்களால், மந்திரத்தால், உணர்ச்சிகளால் இதை சாதிக்க முடியாது. புத்திசாலித்தனமான திட்டங்களை செயற்படுத்துவதற்கு கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பும் அவசியம்.

இலங்கை ஒரு மாதத்திற்கு 500 மில்லியன் டாலர்களை எரிபொருளுக்காக செலவிடுகின்றது. தற்போதைய நெருக்கடியால் எரிபொருள் விலை அதிகரிக்கும் அபாயம் உள்ளது. உலக அளவில் கச்சா எண்ணெய் விலை 40 விழுக்காடு வரை உயரும் என சிலர் கூறப்படுகிறது. இந்த பின்னணியில் எரிபொருளுக்கான கூப்பன் முறையை (பெட்ரோல், டீசல் பெறுவதற்கு கூப்பன் முறை) அறிமுகப்படுத்தும் யோசனையை நிராகரிக்க முடியாது. எப்படியாவது அடுத்த 6 மாதங்களுக்கு 3,300 மில்லியன் டாலர் மதிப்பிலான பெட்ரோல், டீசலை நாம் பெற்றாக வேண்டும்.
எரிவாயுவை இறக்குமதி செய்வதற்காக ஒரு மாதத்திற்கு 40 மில்லியன் டாலர்கள் செலவாகும். நாம் தற்போது எரிவாயு இறக்குமதி செய்ய பலதரப்பு உதவி மற்றும் இந்திய கடன்களைப் பயன்படுத்துகிறோம். அடுத்த 6 மாதங்களுக்கு பெட்ரோல், டீசலைப் பெற 250 மில்லியன் அமெரிக்க டாலர்கள் தேவைப்படுகின்றது. நாட்டில் அடுத்த 3 வாரங்கள் எரிபொருள் தேவை மிக கடினமான காலமாக இருக்கும். நாம் அனைவரும் எரிபொருள் மற்றும் எரிவாயுவை முடிந்தவரை கவனமாக உபயோகப்படுத்த வேண்டிய நேரம் இது. தேவையின்றி எரிபொருள் மற்றும் எரிவாயுவை பதுக்குவதையும் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இந்த கடினமான 3 வாரங்களின் பின்னர் எரிபொருள் மற்றும் உணவை சிரமமின்றி வழங்குவதற்கு நாம் முயற்சி செய்கின்றோம். இவ்வாறு ரணில் விக்கிரமசிங்கே கூறினார்.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications