அடுத்த வாரம் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருகிறது கொரோனா தடுப்பு மருந்து.. அதிபர் கோத்தபய ராஜபக்ச
கொழும்பு: இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கொரோனா தடுப்பூசிகள் பெறப்படுவதாக அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸை எதிர்த்து போராட தடுப்பு மருந்தை பல்வேறு நாடுகள் உருவாக்கியுள்ளன. அதில் இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பு மருந்துகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்த தடுப்பூசிகள் கடந்த வாரம் கொரோனா முன் கள பணியாளர்கள், சுகாதாரத் துறை பணியாளர்களுக்கு போடப்பட்டன. இந்த நிலையில் சீரம் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு வரும் கோவிஷீல்டு மருந்தை அவசர கால பயன்பாட்டுக்கு கொண்டு வர இலங்கை அரசு வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தது.
இதை இந்தியா வரவேற்றது. இதுகுறித்து கொழும்புவில் உள்ள இந்திய தூதரகம் தனது ட்விட்டர் பதிவில் கூறுகையில் கோவிஷீல்டு தடுப்பூசிகளை அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டது வரவேற்கத்தக்கது. இதன் மூலம் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கொரோனா தடுப்பூசிகள் அனுப்பப்படும் என அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டது.
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அடுத்த வாரத்தில் கொரோனா தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைக்க பெறும் என அதிபர் கோத்தபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் சனிக்கிழமை கூறுகையில் இந்த மாதம் 27-ஆம் தேதி மேல் கொரோனா தடுப்பூசிகளை பெறுவதற்கு நாம் காத்திருக்க வேண்டியது இல்லை.
அடுத்த வாரத்தில் இந்தியாவிடம் இருந்து பெறப்படும். ரஷ்யா, சீனாவிடம் இருந்தும் தடுப்பு மருந்துகளை வாங்கவுள்ளோம் என்றார். இலங்கை, பூடான், மாலத்தீவுகள், வங்கதேசம், நேபாளம், மியான்மர், சீசெல்ஸ், ஆப்கானிஸ்தான் மற்றும் மொரீஷியஸ் ஆகிய நாடுகளுக்கு கொரோனா தடுப்பு மருந்துகள் அனுப்பப்படும் என இந்தியா தெரிவித்திருந்தது. அதன்படி நேபாளம், வங்கதேசம், மாலத்தீவு ஆகிய நாடுகளில் தடுப்பு மருந்து கிடைக்கப் பெற்றுள்ளன.
இலங்கையில் கொரோனாவால் 52,964 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 278 பேர் பலியாகிவிட்டனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications