ஈஸ்டர் குண்டுவெடிப்பு.. இலங்கை உளவுத் துறை தலைவர் அதிரடி நீக்கம்
கொழும்பு: ஈஸ்டர் குண்டுவெடிப்பு சம்பவத்தை தடுக்க தவறியதாக இலங்கை உளவுத் துறை தலைவர் சிஸிரா மென்டீஸ் அதிரடியாக நீக்கப்பட்டுவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு பொறுப்பேற்று அவராகவே ராஜினாமா செய்துவிட்டதாக உளவுத் துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி ஈஸ்டர் பண்டிகையின்போது 7 இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்த விபத்தில் 258 பேர் பலியாகினர். 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது.

உலக நாடுகளையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதுபோன்ற ஒரு தாக்குதல் சம்பவம் நடைபெற போவதாக இந்தியா எச்சரிக்கை விடுத்தும் அதை இலங்கை பெரிதாக கருதவில்லை என கூறப்படுகிறது. இந்தியாவின் எச்சரிக்கையை கேட்டு கவனமாக இருந்திருந்தால் இந்த குண்டுவெடிப்பை தடுத்திருக்கலாம் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் குண்டுவெடிப்புக்கு பொறுப்பேற்று இலங்கை போலீஸ் துறை தலைவர் உள்பட அதிகாரிகள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என அதிபர் தரப்பு வலியுறுத்தப்பட்டது.
இந்த நிலையில் இலங்கை உள்நாட்டு பாதுகாப்பு குறித்து வழக்கமாக மேற்கொள்ளப்படும் ஆலோசனை கூட்டத்தை அதிபர் சீறிசேனா கூட்டவில்லை. அவ்வாறு கூட்டியிருந்தால் இந்த சம்பவத்தை தடுத்திருக்கலாம் என இலங்கை உளவுத் துறை தலைவர் சிஸிரா மென்டீஸ் கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.
இதனால் அவர் மீது சீறிசேனா அதிருப்தி அடைந்தார். இதையடுத்து அவர் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டுவிட்டார். இதற்கான காரணத்தை அதிபர் அலுவலகம் கூறவில்லை. எனினும் குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு பொறுப்பேற்று அவராகவே ராஜினாமா செய்து விட்டதாக பாதுகாப்புத் துறை செயலாளர் ஜெனரல் சாந்தா கோட்டேகோடா தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications