ஈஸ்டர் குண்டுவெடிப்பு.. இலங்கை உளவுத் துறை தலைவர் அதிரடி நீக்கம்
கொழும்பு: ஈஸ்டர் குண்டுவெடிப்பு சம்பவத்தை தடுக்க தவறியதாக இலங்கை உளவுத் துறை தலைவர் சிஸிரா மென்டீஸ் அதிரடியாக நீக்கப்பட்டுவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு பொறுப்பேற்று அவராகவே ராஜினாமா செய்துவிட்டதாக உளவுத் துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி ஈஸ்டர் பண்டிகையின்போது 7 இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்த விபத்தில் 258 பேர் பலியாகினர். 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது.

உலக நாடுகளையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதுபோன்ற ஒரு தாக்குதல் சம்பவம் நடைபெற போவதாக இந்தியா எச்சரிக்கை விடுத்தும் அதை இலங்கை பெரிதாக கருதவில்லை என கூறப்படுகிறது. இந்தியாவின் எச்சரிக்கையை கேட்டு கவனமாக இருந்திருந்தால் இந்த குண்டுவெடிப்பை தடுத்திருக்கலாம் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் குண்டுவெடிப்புக்கு பொறுப்பேற்று இலங்கை போலீஸ் துறை தலைவர் உள்பட அதிகாரிகள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என அதிபர் தரப்பு வலியுறுத்தப்பட்டது.
இந்த நிலையில் இலங்கை உள்நாட்டு பாதுகாப்பு குறித்து வழக்கமாக மேற்கொள்ளப்படும் ஆலோசனை கூட்டத்தை அதிபர் சீறிசேனா கூட்டவில்லை. அவ்வாறு கூட்டியிருந்தால் இந்த சம்பவத்தை தடுத்திருக்கலாம் என இலங்கை உளவுத் துறை தலைவர் சிஸிரா மென்டீஸ் கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.
இதனால் அவர் மீது சீறிசேனா அதிருப்தி அடைந்தார். இதையடுத்து அவர் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டுவிட்டார். இதற்கான காரணத்தை அதிபர் அலுவலகம் கூறவில்லை. எனினும் குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு பொறுப்பேற்று அவராகவே ராஜினாமா செய்து விட்டதாக பாதுகாப்புத் துறை செயலாளர் ஜெனரல் சாந்தா கோட்டேகோடா தெரிவித்துள்ளார்.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
தவெகவில் யார் யார் போட்டி? 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள்.. விஜய்யின் நண்பர் ஸ்ரீநாத்துக்கும் சீட்












Click it and Unblock the Notifications