இலங்கை அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை.. ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தது.. போலீஸ் குவிப்பு
கொழும்பு: இலங்கையில் அதிபர் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால் இன்று இரவு 10 மணியில் இருந்து நாளை காலை 6 மணிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதேபோல் அதிபர் நடந்து முடிந்துள்ள சூழலை கருத்தில் கொண்டு, செப்டம்பர் 23ம் தேதி இலங்கைக்கு பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் அடுத்த அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கிய நிலையில் அமைதியான முறையில் நிறைவு பெற்றது. தமிழர்கள் வாழும் பகுதிகளில் வாக்குப்பதிவு மந்தமாகவே இருந்ததாக சொல்கிறார்கள். இலங்கை அதிபர் தேர்தலில் அதிபர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சி தலைவர் சஜித்பிரேமதாச, தேசிய மக்கள் சக்திதலைவர் அநுர குமார திசாநாயக்க ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவுகிறது .

மகிந்த ராஜபக்சவின் மகன் நமல் ராஜபக்ச, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பில் போட்டியிட்டார். மட்டக்களப்பு முன்னாள் எம்.பி. அரியநேந்திரன், தமிழ் பொது கூட்டமைப்பு என்ற பெயரில், சில தமிழ் அமைப்புகளின் சார்பில் தமிழர்களுக்கான பொது வேட்பாளராக களம் இறங்கினார். வாக்கு எண்ணிக்கை மாலை 6 மணிக்கு முடிந்த நிலையில், வாக்குகள் எண்ணும் பணி தொடங்கி உள்ளது. இலங்கையின் புதிய அதிபர் யார் என்பது நாளை பிற்பகல் தெரியும். இலங்கையில் அதிபர் தேர்தலையொட்டி நாடு முழுவதும் 61,000 போலீஸார், 9,000 சிவில் பாதுகாப்பு படையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் இலங்கை அதிபர் தேர்தலில பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருவதால், இரவு 10 மணி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நாளை காலை 6 மணி ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் புதிய அதிபரை தேர்வு செய்யும் சூழல் மற்றும பிற சூழல் காரணமாக செப்டம்பர் 23ம் தேதி இலங்கைக்கு பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் தேவைப்பட்டால் மட்டும் ஊரடங்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஞாயிறு மாலை முதல் செவ்வாய்க்கிழமை வரை ஊரடங்குச் சட்டம் அமலில் இருக்க வாய்ப்பு உள்ளதாக கூறுகிறார்கள். இதனிடையே கொழும்பு விமான நிலையத்தில் ஏராளமான பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications