சுய நலனுக்கு இலங்கை விவகாரத்தை பயன்படுத்தும் தமிழக அரசியல்வாதிகள்: நாமல் ராஜபக்சே மீண்டும் விமர்சனம்
கொழும்பு: தங்களது தனிப்பட்ட நலனுக்காக இலங்கை விவகாரத்தை தமிழக அரசியல் பயன்படுத்தி வருவதாக இலங்கையின் புதிய பிரதமராக பொறுப்பேற்கும் மகிந்த ராஜபக்சேவின் மகனும் எம்.பி.யுமான நாமல் ராஜபக்சே குற்றம்சாட்டியுள்ளார்.
இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபாய ராஜபக்சே வெற்றி பெற்ற உடனேயே நாமல் ராஜபக்சே ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் தமிழக அரசியல் தலைவர்களை மிகக் கடுமையாக விமர்சித்து இருந்தார்.

மேலும் தமிழக அரசியல் தலைவர்கள்தான், இலங்கையில் தமிழர்-சிங்களர் இனங்களுக்கு இடையே பகைமையை மூட்டுவதாகவும் குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மீண்டும் தமிழக அரசியல் தலைவர்களை விமர்சித்து என்.டி.டிவி சேனலுக்கு நாமல் ராஜபக்சே பேட்டியளித்துள்ளார். அந்த பேட்டியில் நாமல் ராஜபக்சே கூறியுள்ளதாவது:
இலங்கை அதிபர் தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்றுக் கொண்ட பிரதமர் மோடிக்கு நன்றி. இலங்கையில் நிலையான அரசாங்கம் அமைவதுதான் இந்தியாவுக்கு நல்லது. வெளியுறவு கொள்கைகளில் பிரதமர் மோடி முற்போக்கான அணுகுமுறைகளை கையாண்டு வருகிறார்.
தமிழகத்தில் உள்ள சில அரசியல்வாதிகள், தங்களது சுயநலனுக்காக இலங்கை விவகாரத்தை பயன்படுத்தி வருகின்றனர். ஈழத் தமிழர்களின் வாழ்வாதாரத்துக்கு தமிழக அரசியல்வாதிகள் இதுவரை என்ன செய்துவிட்டனர்?
இலங்கையில் நடைபெற்ற யுத்தம் என்பது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும்தான். ஆனால் இதனை தமிழர்-சிங்களர் யுத்தமாக சித்தரித்தது தவறானதாகும். இவ்வாறு நாமல் ராஜபக்சே கூறினார்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications