குழந்தைகளை மனித கேடயங்களாக பயன்படுத்திய பிரபாகரன்- ரணில் விஷமப் பேச்சு- தமிழர்கள் கொந்தளிப்பு!
கொழும்பு: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாரகனைப் போல குழந்தைகளை, சிறுவர்களை மனித கேடயங்களாகப் பயன்படுத்தக் கூடாது என இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே பேசியிருப்பது தமிழர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இலங்கையில் பூர்வகுடிகளான தமிழர்கள் தனிநாடு கோரி 30 ஆண்டுகால ஆயுதப் போர் நடத்தினர். பிரபாகரன் தலைமையிலான தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் நடத்திய இந்த ஆயுதப் போராட்டம் உலக நாடுகளை அதிரவும் வைத்தது. 2009-ம் ஆண்டு உலக நாடுகளின் ஆதரவுடன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆயுதப் போரை நிர்மூலமாக்கியது இலங்கை அரசு. இதனைத் தொடர்ந்து விடுதலைப் புலிகள் தங்களது ஆயுதங்களை மவுனிக்க செய்வதாக அறிவித்தனர்.

2009 இறுதி யுத்தம்
கடந்த 13 ஆண்டுகளாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் எந்த ஒரு நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. ஆனால் இலங்கையிலும் இந்தியாவிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் உருவாக்க சதி நடப்பதாக, நிதி சேகரிக்கப்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

ரணில் பேச்சு
இந்த பின்னணியில் இலங்கை தலைநகர் கொழும்பில் நேற்று சிறுவர்களின் அடிப்படை உரிமைகள் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே பங்கேற்று பேசினார். ரணில் பேசுகையில், இலங்கையில் போராட்டங்களின் போது குழந்தைகள், சிறுவர்களை கட்டாயமாக பயன்படுத்தக் கூடாது; அண்மையில் ராஜபக்சேக்களுக்கு எதிராக நடந்த காலிமுகத் திடல் கிளர்ச்சியில் குழந்தைகள்- சிறுவர்கள் கட்டாயமாக பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன என கூறினார்.

பிரபாகரன் போல..
மேலும் கடந்த காலங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், குழந்தைகள்- சிறுவர்களை மனித கேடயங்களாக பயன்படுத்தியதைப் போல போராட்டங்களில் சிறார்களை பயன்படுத்தக் கூடாது. போலீசார் இத்தகைய போக்கை கடுமையாகத் தடுக்க வேண்டும். குழந்தைகள், சிறுவர்கள், இளைஞர்களுக்கு பல்வேறு சிறப்புத் திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இனி வீதிகளில் நடைபெறும் போராட்டங்களில் குழந்தைகள்- சிறுவர்கள் பங்கேற்பதை போலீசார் அனுமதிக்க கூடாது என்றார்.

தமிழர்கள் கொந்தளிப்பு
ரணில் விக்கிரமசிங்கேவின் இந்தப் பேச்சு தமிழர்களை கொந்தளிப்படைய வைத்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதப் போராட்டம் நடத்தியது மண்ணின் விடுதலைக்காக.. சிறுவர்களை பயன்படுத்துகிறார்கள் புலிகள் என சர்வதேச சமூகம் குற்றம்சாட்டிய போது விடுதலைப் புலிகள் தாங்களாகவே முன்வந்து 18 வயதுக்கு குறைவானவர்களை இயக்கத்தில் இருந்து வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர். அதனை மறைத்து அபாண்டமாக பழிசுமத்துகிறார் ரணில் என்கின்றனர் தமிழர தரப்பினர்
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications