குழந்தைகளை மனித கேடயங்களாக பயன்படுத்திய பிரபாகரன்- ரணில் விஷமப் பேச்சு- தமிழர்கள் கொந்தளிப்பு!
கொழும்பு: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாரகனைப் போல குழந்தைகளை, சிறுவர்களை மனித கேடயங்களாகப் பயன்படுத்தக் கூடாது என இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே பேசியிருப்பது தமிழர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இலங்கையில் பூர்வகுடிகளான தமிழர்கள் தனிநாடு கோரி 30 ஆண்டுகால ஆயுதப் போர் நடத்தினர். பிரபாகரன் தலைமையிலான தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் நடத்திய இந்த ஆயுதப் போராட்டம் உலக நாடுகளை அதிரவும் வைத்தது. 2009-ம் ஆண்டு உலக நாடுகளின் ஆதரவுடன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆயுதப் போரை நிர்மூலமாக்கியது இலங்கை அரசு. இதனைத் தொடர்ந்து விடுதலைப் புலிகள் தங்களது ஆயுதங்களை மவுனிக்க செய்வதாக அறிவித்தனர்.

2009 இறுதி யுத்தம்
கடந்த 13 ஆண்டுகளாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் எந்த ஒரு நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. ஆனால் இலங்கையிலும் இந்தியாவிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் உருவாக்க சதி நடப்பதாக, நிதி சேகரிக்கப்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

ரணில் பேச்சு
இந்த பின்னணியில் இலங்கை தலைநகர் கொழும்பில் நேற்று சிறுவர்களின் அடிப்படை உரிமைகள் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே பங்கேற்று பேசினார். ரணில் பேசுகையில், இலங்கையில் போராட்டங்களின் போது குழந்தைகள், சிறுவர்களை கட்டாயமாக பயன்படுத்தக் கூடாது; அண்மையில் ராஜபக்சேக்களுக்கு எதிராக நடந்த காலிமுகத் திடல் கிளர்ச்சியில் குழந்தைகள்- சிறுவர்கள் கட்டாயமாக பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன என கூறினார்.

பிரபாகரன் போல..
மேலும் கடந்த காலங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், குழந்தைகள்- சிறுவர்களை மனித கேடயங்களாக பயன்படுத்தியதைப் போல போராட்டங்களில் சிறார்களை பயன்படுத்தக் கூடாது. போலீசார் இத்தகைய போக்கை கடுமையாகத் தடுக்க வேண்டும். குழந்தைகள், சிறுவர்கள், இளைஞர்களுக்கு பல்வேறு சிறப்புத் திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இனி வீதிகளில் நடைபெறும் போராட்டங்களில் குழந்தைகள்- சிறுவர்கள் பங்கேற்பதை போலீசார் அனுமதிக்க கூடாது என்றார்.

தமிழர்கள் கொந்தளிப்பு
ரணில் விக்கிரமசிங்கேவின் இந்தப் பேச்சு தமிழர்களை கொந்தளிப்படைய வைத்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதப் போராட்டம் நடத்தியது மண்ணின் விடுதலைக்காக.. சிறுவர்களை பயன்படுத்துகிறார்கள் புலிகள் என சர்வதேச சமூகம் குற்றம்சாட்டிய போது விடுதலைப் புலிகள் தாங்களாகவே முன்வந்து 18 வயதுக்கு குறைவானவர்களை இயக்கத்தில் இருந்து வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர். அதனை மறைத்து அபாண்டமாக பழிசுமத்துகிறார் ரணில் என்கின்றனர் தமிழர தரப்பினர்
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications