போர் குற்றம்: அமெரிக்காவுக்குள் நுழைய இலங்கை மாஜி கடற்படை தளபதி வசந்த கரன்னகொடவுக்கு அதிரடி தடை!

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: இலங்கையின் முன்னாள் கடற்படை தளபதியும் வடமேற்கு மாகாண ஆளுநருமான அட்மிரல் வசந்த கரன்னகொட மற்றும் அவரது மனைவி, அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

இலங்கையில் தமிழீழம் தனி நாடு கோரி போராடிய தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் இலங்கை அரசுக்கும் இடையே யுத்தம் நடைபெற்று வந்தது. 2009-ம் ஆண்டு இந்த யுத்தம் முடிவுக்கு வந்தது. அப்போது இலங்கை கடற்படை தளபதியாக இருந்தவர் அட்மிரல் வசந்த கரன்னகொட.

War Crime: US sanctions against Sri Lankan ex-navy chief Wasantha Karannagoda

அக்காலப் பகுதியில் வசந்த கரன்னகொட மீது பல்வேறு போர்க் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அதில் 11 மாணவர்களை கடத்தி அவர்களது பெற்றோரிடம் பணம் பெற்றது; பின்னர் 11 மாணவர்களையும் காணாமல் ஆக்க செய்தது ஆகியவை மிக முக்கியமானவை. இது தொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது. ஆனால் 2021-ம் ஆண்டு வசந்தர கொரன்னகடா இவ்வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில் வசந்த கரன்னகொட, இலங்கை வடமேற்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து அமெரிக்காவுக்கு மனைவியுடன் செல்ல விசா கோரி விண்ணப்பித்திருந்தார் வசந்த கரன்னகொட. அவரது விசா விண்ணப்பத்தை அமெரிக்கா அரசு நிராகரித்துவிட்டது. வசந்தர கரன்னகொட, அவரது மனைவி அமெரிக்காவுக்குள் நுழைய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

War Crime: US sanctions against Sri Lankan ex-navy chief Wasantha Karannagoda

வசந்த கரன்னகொட மீதான குற்றச்சாட்டுகளில் இருந்து நீதிமன்றம் அவரை விடுவித்திருந்தாலும் பல்வேறு மனித உரிமை அமைப்புகள், சர்வதேச மனித உரிமை விசாரணை அமைப்புகளிடம் ஆதாரங்களுடன் புகார்களை அளித்திருந்தன. இந்த ஆவணங்களின் அடிப்படையில் தற்போது வசந்த கரன்னகொடவுக்கு தடை விதித்துள்ளது அமெரிக்கா அரசு.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+