இப்படியே போனா எப்படிப்பா.. ரயில்வே துறையில் தொடர்ந்து புறக்கணிப்படும் தமிழகம்
சென்னை: ரயில்வே துறையில் கடந்த பல ஆண்டுகளாகவே தமிழகம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டுள்ள நிதி நிலை அறிக்கையிலும் தமிழகத்திற்கு குறிப்பிட்ட திட்டங்களோ அல்லது பிற மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட நிதியோ இல்லாதது தமிழக மக்களிடையே பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அளவில் முதன் முறையாக உருவாக்கப்பட்ட ரயில்வே மண்டலம் தெற்கு ரயில்வே மண்டலம்தான். இது 1951ம் ஆண்டு ஏப்ரல் 14 -ம் தேதியன்று உருவாக்கப்பட்டது. இருப்பினும் பெரிய அளவில் வளர்ச்சி பெறாத மண்டலமாக இருப்பது தெற்கு ரயில்வேதான். இந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட இடைக்கால நிதிநிலை அறிக்கையில் ரயில்வேத் துறைக்கு ரூ.64,587 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதே வேளையில் மூலதன செலவுகளுக்கான இலக்கு ரூ.1,58,658 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் தெற்கு ரயில்வே துறைக்கு கடந்த ஆண்டின் நிதி ஒதுக்கீடான ரூ.2932.61 கோடியை விட ரூ.34.28 கோடி குறைவாக ரூ.2,898.33 கோடி மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தண்டவாளங்களை புதுப்பிக்க ரூ 917 கோடிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நிதி ஒதுக்கீடு இல்லை
தமிழகத்தில் உள்ள தென்மாவட்டங்கள், காவிரிப் பாசன மாவட்டங்கள், புதுச்சேரி ஆகியவற்றையும் தலைநகர் சென்னையையும் ஒன்றிணைக்கும் வகையில் கிழக்கு கடற்கரையோர ரயில்பாதை அமைக்கும் பணிக்காக திட்டம் தயாரிக்கப்பட்டு 10 ஆண்டுகள் கடந்தும் இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

சுற்றுலா வளரும்
இந்தப் பாதை அமைக்கப்பட்டால் தென்மாவட்டங்களுக்கான பயணிகள் நெரிசல் குறைவதற்கும் அதே வேளையில் மேலும் சுற்றுலா வளர்ச்சி ஏற்படுவதற்கும் காரணமாக அமையும். ஆனால் 10 ஆண்டுகளாக இது வெறும் திட்டமாக மட்டுமே உள்ளது. இந்த நிதி நிலை அறிக்கையிலும் இதற்கு நிதி ஒதுக்கப்படாதது தமிழக மக்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாமல்லபுரம் டூ கடலூர்
கிழக்கு கடற்கரை ரயில்பாதை திட்டத்தின் கீழ் சென்னை மாமல்லபுரம் வழியாக கடலூர் வரையிலான 179 கிலோ மீட்டர் பாதை, திண்டிவனம் முதல் திருவண்ணாமலை வரையிலான 70 கிலோ மீட்டர் பாதை, திண்டிவனம் முதல் நகரி வரையிலான 179 கிலோமீட்டர்கள் பாதை, 88 கிலோ மீட்டர் தூரம் கொண்ட அத்திப்பட்டு - புத்தூர் வரையிலான பாதை 91 கிலோமீட்டர்கள் அளவுக்கு ஈரோடு - பழனி பாதை, தூத்துக்குடி-மதுரை வரையிலான 143 கிலோ மீட்டர் பாதை, 60 கிலோமீட்டர் தூரத்திலான ஸ்ரீபெரும்புதூர், இருங்காட்டுகோட்டை. கூடுவாஞ்சேரி வரையிலான பாதை 36 கிலோமீட்டர் தூரம் அளவிலான மொரப்பூர் தருமபுரி பாதை ஆகிய ரயில் தடங்களுக்கு திட்டங்கள் தீட்டப்பட்டு கடந்த 2006 ம் ஆண்டே மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குறைந்த நிதி ஒதுக்கீடு
849 கிலோமீட்டர் தூரம் கொண்ட இந்த வழித்தடத்திற்கு ரூ.11,405 கோடிகள் அளவுக்கு திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்ட நிலையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள இந்த இடைக்கால நிதி நிலை அறிக்கையில் இந்தப் பணிகளை மேற்கொள்ள வெறும் 54 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது தமிழக மக்களிடையே பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மொத்தத்தில் இந்த பட்ஜெட்டில் தமிழகத்திற்கு மகிழ்ச்சி தரும் அம்சங்கள் இல்லை.
-
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே!












Click it and Unblock the Notifications