ஆதினத்துக்கு ஒரு நீதி.. என்.எல்.சி.க்கு ஒரு நீதியா? அண்ணாமலைக்கு அதிமுக எம்.எல்.ஏ.கேள்வி!
கடலூர்: ஆதினங்களில் ஒரு பிரச்சனை என்றால் முதல் ஆளாக நிற்கும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, என்.எல்.சி.யில் தமிழக இளைஞர்கள் புறக்கணிக்கப்படும் விவகாரத்தில் ஏன் தலையிட வில்லை என புவனகிரி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. அருண் மொழித்தேவன் வினவியுள்ளார்.
ஆதினத்துக்கு ஒரு நீதி.. என்.எல்.சி.க்கு ஒரு நீதியா? என அண்ணாமலைக்கு அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
அருண் மொழித்தேவன் எம்.எல்.ஏ.வை பொறுத்தவரை எடப்பாடி பழனிசாமியின் முக்கியத் தளபதிகளில் ஒருவர் என்பது கவனிக்கத்தக்கது.

என்.எல்.சி. நிறுவனம்
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் அரை நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக இயங்கி வரும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் இந்தியாவில் உள்ள மற்ற பொதுத்துறை நிறுவனங்களை விட சிறப்பாக செயல்பட்டு ‘நவரத்னா' தகுதியைப் பெற்று இருக்கின்றது. இதில் காலியாக இருந்த பொறியாளர் பணியிடங்களுக்கு 299 வட மாநில இளைஞர்கள் தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். இதில் குறிப்பிட வேண்டிய விவகாரம் என்னவென்றால் ஒரு தமிழக இளைஞர் கூட தேர்வு செய்யப்படாதது தான்.

அரசியல் தலைவர்கள்
இந்த விவகாரம் தான் கடந்த மூன்று நாட்களாக விஸ்வரூபம் எடுத்து வருகிறது. வேல்முருகன், சீமான், சசிகலா, வைகோ, அன்புமணி ராமதாஸ் என தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் கடலூர் மாவட்டம் புவனகிரி தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழித் தேவன் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு சுளீர் கேள்வி ஒன்றை எழுப்பியிருக்கிறார்.

என்ன நீதி இது?
ஆதினத்துக்கு ஒரு பிரச்சனை என்றால் அங்கு முதல் ஆளாக போய் நிற்கும் அண்ணாமலை என்.எல்.சி. விவகாரத்தில் ஏன் தலையிடவில்லை என்றும் ஆதினத்துக்கு ஒரு நீதி.. என்.எல்.சி.க்கு ஒரு நீதியா? எனவும் அதிமுக எம்.எல்.ஏ. அருண்மொழித் தேவன் வினவியிருக்கிறார். பாஜகவும் அதிமுகவும் கூட்டணிக் கட்சிகள் என்கிற போதும் அண்ணாமலையை நோக்கி அதிமுக எம்.எல்.ஏ. கேள்வி எழுப்பியிருப்பது அரசியல் களத்தில் மிக முக்கியமான நிகழ்வாக கருதப்படுகிறது.

தேர்வில் சதி
இதனிடையே என்.எல்.சி. பொறியாளர் பணியிடங்களுக்கு நடைபெற்ற தேர்வில் மிகப்பெரும் சதி நடந்திருப்பதாக அதிமுக எம்.எல்.ஏ. அருண்மொழித் தேவன் பகீர் குற்றசாட்டை முன் வைத்திருக்கிறார். மத்தியில் பாஜக ஆட்சி நடப்பதால் என்.எல்.சி. விவகாரம் பற்றி மத்திய அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு அண்ணாமலைக்கு தான் உள்ளது என அதிமுக எம்.எல்.ஏ. கூறியிருக்கிறார்.
Recommended Video

திடீர் ஆவேசம்
சென்னை வந்த பிரதமர் மோடி எடப்பாடி பழனிசாமியை சந்திக்க நேரம் ஒதுக்காத நிலையில் அதிமுக எம்.எல்.ஏ. ஒருவர் இவ்வாறு சீறியிருப்பது கவனிக்கத்தக்கது. அதுமட்டுமல்லாமல் அருண் மொழித்தேவன் எம்.எல்.ஏ.வை பொறுத்தவரை எடப்பாடி பழனிசாமியின் முக்கியத் தளபதிகளில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
"அண்ணாமலை ஒரு ஜீரோ.. சொந்த தொகுதியில் தோற்றுவிட்டு பிரதமர் போல பில்டப் கொடுக்கிறார்!" ஆதித்ய தாக்கரே -
அண்ணாமலை போட்டியிடும் சட்டசபை தொகுதி எது? கோவையில் 3 தொகுதியை குறிவைக்கும் பாஜக.. முக்கிய தகவல் -
"இனி மும்பை மண்ணில் கால் வைத்தால்.." அண்ணாமலைக்கு ஷாக் மிரட்டல்.. மராட்டிய அமைப்புகள் பகீர் -
சிபிஐ முன் ஆஜராகும் விஜய்.. சம்மன் கொடுப்பதால் குற்றவாளி கிடையாது.. அண்ணாமலை பேச்சு -
“முடிஞ்சா கால வெட்டி பாரு.. நான் மும்பை வரத்தான் போறேன்”- சிவசேனா, ராஜ் தாக்கரேவுக்கு அண்ணாமலை சவால் -
என்.டி.ஏ கூட்டணியில் விஜய்? "கேப்டனும் கோச்சும் முடிவு பண்ணுவாங்க".. அண்ணாமலை பரபரப்பு கருத்து! -
நேரம் வந்துவிட்டது.. வரும் நாட்களில் தங்கம் விலையில்.. சுனாமியே ஏற்பட போகிறது.. டிரம்ப் பகீர் முடிவு -
வீட்டிற்கு வந்து.. கதவை தட்ட போகும் இபி அதிகாரிகள்.. இபி பில்லே வராது.. இதை நோட் பண்ணுங்க! -
இனி அமெரிக்காவை நம்ப முடியாது.. தங்கத்தை வைத்து அடித்து ஆடும் மோடி.. திரும்பி வந்த பொக்கிஷம் -
கேப்டன் ஆசையா சேர்த்த 3 சொத்தும் போச்சு.. பெட்டி வாங்கியதாக பேய் கதை! இக்கட்டான நிலையில் குடும்பம்! -
உலகின் பெட்ரோல் சாம்ராஜ்ஜியமே டிரம்ப் கையில்.. இரவோடு இரவாக கையெழுத்து.. அட்டை கத்தி சீனா, ரஷ்யா -
இந்தியாவுக்கு விழும் அடி.. ஈரான் குழப்பத்தால் வந்த புதிய பிரச்சனை.. பின்னணியில் பாஸ்மதி அரிசி












Click it and Unblock the Notifications