விருத்தச்சாலம்.. எம்எல்ஏ கலைச்செல்வனை வேட்பாளராக அறிவிக்க கோரி அதிமுகவினர் போராட்டம்.. பாமக ஷாக்
கடலூர்: விருத்தாசலம் தொகுதிக்கு தற்போதைய எம்எல்ஏ கலைச்செல்வனை மீண்டும் வேட்பாளராக அறிவிக்கக் கோரி அதிமுகவினர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
Recommended Video
தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி கடலூர் மாவட்டம் விருதாச்சலம் சட்டமன்ற தொகுதி பாமக விற்கு ஒதுக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தற்போதைய எம்எல்ஏ கலைச்செல்வனின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர், அதிமுக வெற்றி பெற்ற விருத்தாச்சலம் தொகுதியை மீண்டும் அதிமுகவிற்கு ஒதுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரினர்.
அத்துடன் விருத்தாச்சலம் எம்எல்ஏ கலைச்செல்வனை மீண்டும் வேட்பாளராக அறிவிக்க வலியுறுத்தினர். பாமகவிற்கு தொகுதிகயை ஒதுக்கியதற்கு , கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் கிடைத்து விரைந்து வந்த விருதாச்சலம் துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன், இன்ஸ்பெக்டர் விஜயரங்கன் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தினார்.
அப்போது மீண்டும் எம்எல்ஏ கலைச்செல்வனை வேட்பாளராக அறிவிக்க வலியுறுத்தி திடீரென சாலை மறியல் செய்ய முயன்ற போது தொண்டர் ஒருவரை போலீசார் இழுத்துச் சென்று அப்புறப்படுத்தினர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தியதன் பேரில் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications