ஃபேஸ்புக்கில் ஆபாசமாக சித்தரிப்பு.. ராதிகா மரணத்துக்கு நீதி வேண்டும்.. எச்.ராஜா வேண்டுகோள்!
கடலூர் மாணவி ராதிகா மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும் என எச் ராஜா கூறியுள்ளார்
Recommended Video
சென்னை: "மாணவி ராதிகாவை தற்கொலைக்கு தள்ளிய சமூக விரோதிகளை கைது செய்து காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று எச்.ராஜா கேட்டுக் கொண்டுள்ளார்.
இரு தினங்களாக கடலூர் காதல் ஜோடியின் தற்கொலை சம்பவம் தமிழகத்தை உலுக்கி வருகிறது. நெய்வேலி அருகே கல்லூரி மாணவி ராதிகா குறித்து ஃபேஸ்புக்கில் இளைஞர் ஒருவர் ஆபாச பதிவு போட்டார்.
இதனால், இரு குடும்பங்களுக்கு இடையே பிரச்னை ஏற்பட்டு, அந்த மனவேதனையில் ராதிகா தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இளைஞர்
தற்கொலை செய்து கொண்ட ராதிகாவும், அவரது படத்தை ஆபாசமாக சித்தரித்து முகநூலில் வெளியிட்டதாக கூறப்படும் இளைஞரும் வெவ்வேறு சமூகத்தினர் என்று கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பதற்ற நிலை காணப்பட்டு வருவதுடன், 100-க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

டாக்டர் ராமதாஸ்
இந்த சம்பவத்துக்கு டாக்டர் ராமதாஸ் உட்பட அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தும், ராதிகா தற்கொலைக்கு காரணமானவர்கள் மீதும் நடவடிக்கை வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். அதன்படி எச்.ராஜாவும் இதே வேண்டுகோளை ட்வீட்டில் பதிவிட்டுள்ளார்.
|
பாதுகாப்புக்கு கேடு
அதில், "ஆபாசமாக சித்தரித்து முகநூலில் படம் வெளியிட்டு மாணவி ராதிகாவை தற்கொலைக்கு தள்ளிய சமூக விரோதிகளை கைது செய்து காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இம்மாதிரி சக்திகளை வெளியில் உலவ அனுமதிப்பது பெண்களின் பாதுகாப்பிற்கு கேடு" என்று பதிவிட்டுள்ளார்.

நீதி தேவை
சம்பந்தப்பட்ட இளைஞர் "சரக்கு மிடுக்கு" கட்சியை சேர்ந்தவர் என்பதால் எச்.ராஜா இப்படி சொல்லுகிறாரா, அல்லது விசாரணையில் நடுநிலைமை தேவை என்பதை சொல்லுகிறாரா என்று தெரியவில்லை... எதுவானாலும் ராதிகா மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும்!
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications